எப்படியும் பாவிகளை


பாவிகளை ஒப்புரவாக்கிக்கொள்வதற்கு உதித்தார்

134. (158) காம்போதி                                              ஆதி தாளம்

பல்லவி

          எப்படியும் பாவிகளை ஒப்புரவாக்கிக்கொள்வதற்கு
          இப்புவியிலே உதித்தார்; அற்புதந்தானே.

அனுபல்லவி

            மெய்ப்பரம் புவியும் தந்த தற்பரன் அனாதி பிதா
            நற்புதல்வனான ஏசு நாத கிருபாகரனார்.            - எப்

சரணங்கள்

1.         மட்டில்லாப் பொருள் அனைத்தும் திட்டமாகவே படைத்து
            இட்டமாய் அனுக்கிரகித்த சிட்டிகன் தானே;
            கட்டளையிட்ட கற்பனை விட்டொரு சர்ப்பத்தின் வாயில்
            பட்டு நரகத்துக்காளாய்க் கெட்டழிந்த பேர் என்றாலும். - எப்

2.         அச்சயன்[1] மோசேயைக் கொண்டன் றெச்சரித் தெழுதித்தந்த
            உச்சித கற்பனை கடந் திச்சையினாலே,
            துர்ச்சனப் பாசாசைக் கூடி மிச்சமாய்ப் பாவங்கள் செய்து
            நிச்சயம் கெட்டுப் போனார்கள்; ரட்சிக்கக்கூடாதென்றாலும். - எப்

3.         தாக்கிய பராபரன் உண்டாக்கிய அனந்த செல்வப்
            பாக்கியங்கள் அனைத்தையும் போக்கடித்துமே,
            யோக்கியம் தெய்வ புத்ர சிலாக்கியம் எல்லாம் இழந்து
            பேய்க்கடிமை ஆட்கள் கேட்டை நீக்குதற் கேலாதென்றாலும், - எப்

4.         மேட்டிமை எல்லாம் துறந்து, காட்டுக்குள் இருக்கும் அந்த
            மாட்டுக்கொட்டிலில் பிறந்தோர் ஆட்டுக்குட்டி போல்,
            பாட்டுக்கிடமாய் உலகை மீட்டுக்கொண்டனந்த மோட்ச
            வீட்டுக்குட்படுத்த மாந்தர் நாட்டுக்குள் மரித்துயிர்த்து. - எப்

- வே. சாஸ்திரியார்


[1] கடவுள்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு