சுபஜெய மங்களமே நித்திய


உயிர்த்த நாதருக்கே மங்களம்


107. இராகம்: சங்கராபரணம்                                     சாபு தாளம்

பல்லவி

          சுபஜெய மங்களமே-நித்திய சுபஜெய மங்களமே,
          சுகமே-தரவே-புவிமீ-துயிர்த்தசுதனேசு நாதருக்கே.

சரணங்கள்

1.         தீர்க்க ருரைத்தனரே,-இன்று
            ஜேசு உயிர்த்தனரே;
            ஜெகதீஸ்-பரனார்-சுதனார்-கிறிஸ்து
            ஜெயமா யெழுந்தவர்க்கே - சுப

2.         தூதர்-சங்க முழங்க,-வானம்
            ஜோதியினு லிலங்கத்
            துரிதாய்ப்-பரனார்-களிகூர்ந்-திடவே
            தொனியா யெழுந்தவர்க்கே. - சுப

3.         அங்கங் குளிர்ந்திடவே,-உல
            கெங்கும் மகிழ்ந்திடவே,
            அடியா-ருடசா-வுடகூ-ரொடித்து
            அகில மெழுந்தவர்க்கே. - சுப

4.         காலையிலே எழுந்து-நிதம்
            கர்த்தனையே நினைத்துக்,
            கரமே-குவித்துத்-துதிபா-டிடவே
            காலை யிலெழுந்தவர்க்கே. - சுப

5.         ஆனந்தம் பாடிடவும்,-பரன்
            அன்பைக் கொண்டாடிடவும்,
            அசையா-நிலையோ-டெழுந்து-தொழவே
            அருள் கூர்ந்திடு பவர்க்கே. - சுபா

6.         எக்காளமே தொனிக்க-பக்தர்
            யாவருமே யெழும்ப,
            இனிதாய்-அரசா-ளவுமேயுலகில்
            எழு மிம்மானு வேலர்க்கே. - சுப

- அ.ஜ. பிச்சைமுத்து

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு