என்றைக்கு காண்பேனோ


என்றைக்குக் காண்பேனோ?

73.     (71) செஞ்சுருட்டி                                          ஆதி தாளம்

பல்லவி
            என்றைக்கு காண்பேனோ, என் ஏசு தேவா?

அனுபல்லவி

            குன்றாத தேவ குமாரனைத் தானே நான் - என்

சரணங்கள்

1.         பரகதி திறந்து, பாரினில் பிறந்து,
            நரர் வடிவாய், வந்த ராஜ உல்லசானை. - என்

2.         ஐந்தப்பம் கொண்டு அநேகருக்குப் பகிர்ந்து,
            சிந்தையில் உவந்த வ சீகர சினேகனை. - என்

3.         மாசிலாத நாதன், மாமறை நூலன்,
            ஏசுவின் திருமுக தரிசனம் நோக்கி நான். - என்

- வே. சாஸ்திரியார்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு