குருசினில் தொங்கியே குருதியும் வடிய


குருசினில் தொங்கியே

64. (107) சங்கராபரணம்                                 ஆதிதாளம்

பல்லவி

            குருசினில் தொங்கியே குருதியும் வடிய,
                        கொல்கதா மலைதனிலே-நம்
            குருவேசு சுவாமி கொடுந் துயர், பாவி,
                        கொள்ளாய் கண் கொண்டு.

சரணங்கள்

1.         சிரசினில் முண்முடி உறுத்திட, அறைந்தே
                        சிலுவையில் சேர்த்தையோ!-தீயர்
            திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்,
                        சேனைத்திரள் சூழ. - குருசினில்

2.         பாதகர் நடுவில் பாவியினேசன்
                        பாதகன்போல் தொங்க,-யூத
            பாதகர் பரிகாசங்கள் பண்ணிப்
                        படுத்திய கொடுமைதனை. - குருசினில்

3.         சந்திரசூரிய சகல வான் சேனைகள்
                        சகியாமல், நாணுதையோ!-தேவ
            சுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால்
                        துடிக்கா நெஞ்சுண்டோ? - குருசினில்

4.         ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த
                        இறைவன் விலாவதிலே,-அவர்
            தீட்டிய திட்சைக் குருதியும் ஜலமும்
                        திறந்தூறோடுது, பார்; - குருசினில்

5.         எருசலேம் மாதே, மறுகி நீயழுது
                        ஏங்கிப் புலம்பலையோ?-நின்
            எருசலையதிபன் இள மணவாளன்
                        எடுத்த கோல மிதோ? - குருசினில்

- சு.ச. ஏசடியான்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு