இவரே பெருமான் மற்றப்


இவரே பெருமான்

82. பியாகு                                                     ஆதிதாளம்

பல்லவி

            இவரே பெருமான், மற்றப்
            பேர் அலவே பூமான்,-இவரே பெருமான்.

சரணங்கள்

1.         கவலைக் கிடங்கொடுத் தறியார்,-வேறு
            பவவினை யாதுமே தெரியார்,-இப்
            புவனமீது நமக்குரியார். - இவரே

2.         குருடர்களுக் குதவும் விழியாம்,-பவக்
            கரும இருளை நீக்கும் ஒளியாம்,-தெய்வம்
            இருக்குந் தலஞ்செல் வாசல் வழியாம் - இவரே

3.         பலபிணி தீர்க்கும் பரிகாரி,-சொல்லும்
            வலமையில் மிக்க விபகாரி,-எக்
            குலத்துக்கும் நல்ல உபகாரி. - இவரே

4.         அறஞ் செய்வதினில் ஒரு சித்தன்,-கொடு
            மறம்விடு பவர்க்கருள் முத்தன்,-இங்கே
            இறந்தோர்க் குயிரீயும் கர்த்தன். - இவரே

5.         அலகைதனை[1] ஜெயித்த வீரன்,-பவ
            உலகை ரட்சித்த எழிற்பேரன்,-விண்
            ணுலகு வாழ் தேவ குமாரன். - இவரே

6.         பொன்னுலகத் தனில்வாழ் யோகன்,-அருள்
            துன்ன[2] உலகில் நன்மைத் தேகன்,-நம்பால்
            தன்னை யளித்த ஓர் தியாகன். - இவரே

- த. ஐயாத்துரை


[1] பிசாசை
[2] நிறைய

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு