இயேசுவை அன்றி வேறொரு ரட்சகர்


வேறொரு ரட்சகர் உண்டோ

123. (150) மணிரங்கு                    ஆதி தாளம்

பல்லவி

                        யேசுவை அன்றி வேறொரு ரட்சகர்
                        காசினி தனிலுண்டோ, மனமே?-அவர்
                        நேசமறிந்து விசுவாசம் இல்லாமலே,
                        மோசம் போவதேன், மனமே?

சரணங்கள்

1.         ஆதம் ஏவை செய்த பாதகம் தொலைந்திடப்
            பூதலம் வந்ததார், மனமே?-கொடும்
            யூதர்களால் பல வாதைகள் கொண்டு திவ்ய
            போதகம் செய்ததார், மனமே? - யேசு

2.         இந்த வாழ்வு கன நிந்தை என்றுனது
            சிந்தை தெளிந்திருந்தும், மனமே-ஐயோ!
            பந்த பாசமதில் நொந்து நாள் தோறும் அ
            லைந்து திரிவதேன், மனமே? - ஏசு

3.         பூதல மீதினில் ஓதரி[1] தாம் பரஞ்
            சோதியைப் போற்றிசெய் மனமே;-செய்தால்
            பாதகம் போய் மோட்ச சாதகம் ஆமென்று
            வேதமுரைக்கு தல்லோ மனமே? - ஏசு

- தஞ்சை சத்தியநாதன்




[1] சொல்லுதற்கரிய

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு