தீய மனதை மாற்ற வாரும்


தீய மனதை மாற்ற வாரும்

121. (135) மணிரங்கு                                               ஏசு தாளம்

பல்லவி
          தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே,-கன
          நேய ஆவியே.

சரணங்கள்

1.         மாய பாசத் தழுந்தி வாடி மாளுஞ் சாவிதால்,-மிக மாயும்
                        பாவி நான். - தீய

2.         தீமை செய்ய நாடுதென்றன் திருக்கு நெஞ்சமே,-மருள்
                        தீர்க்கும், தஞ்சமே. - தீய

3.         பரத்தை நோக்க மனம் அற்றேனே, பதடிதான்,[1] ஐயா.-ஒரு
                        பாவி நான் ஐயா. - தீய

5.         புதிய சிந்தை, புதிய ஆசை புதுப்பித்தாக்கவே,-அதைப்
                        புகழ்ந்து காக்கவே. - தீய

5.         ஏக்கத்தோடென் மீட்பைத் தேடி, இரந்து கெஞ்சவே,-தினம்
                        இதயம் அஞ்சவே. - தீய

6.         கிறிஸ்து மீது நாட்டங் கொண்டு கீதம் பாடவே,-அவர்
                        கிருபை தேடவே. - தீய

7.         தேவ வசனப் பாலின்மீது தேட்டம் தோன்றவே,-மிகு
                        தெளிவு வேண்டவே. - தீய

8.         ஜெபத்தின் தாகம் அகத்தில் ஊற்றி ஜெபித்துப் போற்றவே,-மிகச்
                        சிறப்பாய் ஏற்றவே. - தீய

- வின்பிரட்


[1] பதர்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு