சுத்திகரியாயோ துர்க்குணம் நீங்க


சுத்திகரியாயோ

120. (134) செஞ்சுருட்டி                                 ரூபக தாளம்

பல்லவி

                        சுத்திகரியாயோ, துர்க்குணம் நீங்க என்னைச்
                        சுத்திகரியாயோ,

சரணங்கள்

1.         மத்தியஸ்தர் பிரசாதனே, பரிசுத்தாவி எனும் நாதனே,
            பக்தி தரும் போதனே, உயர் முக்திதரும் நீதனே! - சுத்

2.         பெந்தெகொஸ்து முருகிலே,[1] அங்கு வந்தே சீஷரருகிலே,
            உந்திய[2] கருணை வாரியே, அருள் தந்திடு நல் உதாரியே! - சுத்

3.         அந்தகாரம் விலகவே, ஒளி சந்ததமும் இலங்கவே,
            சந்தரப்பிரகாசனே, தேவமைந்தர் போற்றும் நல்நேசனே! - சுத்

4.         சத்திய நெறியில் ஏறவே, நற்பத்தியில் தினம் தேறவே,
            புத்தியைத்தரும் ஆவியே, இதயத்தை உன்னருள் மேவியே. - சுத்

5.         தேவ நல் வர மானவா, எங்கு மேவு மூன்றில் ஒன்றானவா,
            பாவ மாசினைப் போக்குவாய், நித்திய சாபம் யாவையும் நீக்குவாய். - சுத்

- யோ. பால்மர்


[1] பண்டிகையில்
[2] உயர்ந்த

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு