என்ன என் ஆனந்தம்


என்ன என் ஆனந்தம்!

77. சங்கராபரணம்                                          ஆதிதாளம்

பல்லவி

            என்ன என் ஆனந்தம்! என்ன என் ஆனந்தம்!
                        இயம்பலாகாதா,
            மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்
                        மன்னித்து விட்டாரே.

சரணங்கள்

1.         கூடுவோம், ஆடுவோம், பாடுவோம், நன்றாய்
                        மகிழ் கொண்டாடுவோம்;
            நாடியே நம்மைத் தேடியே வந்த
                        நாதனைப் போற்றிடுவோம்.

2.         பாவங்கள், சாபங்கள், கோபங்கள் எல்லாம்
                        பரிகரித்தாரே;
            தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து
                        தேற்றியே விட்டாரே.

3.         அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்-கு
                        அருளினதாலே,
            நிச்சயம் சுவாமியைப் பற்றியே சாட்சி
                        பகரவேண்டியதே.

4.         வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல்வீட்டில்
                        ஜெயக் கொடியுடனே,
            மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற
                        மன்னனைத் தோத்தரிப்போம்.

 - சத்தியநாதன்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு