தோத்திரம் செய்வேனே ரட்சகனைத்


தோத்திரம் செய்வேனே

85. (60) பைரவி                                                      ஆதிதாளம்

பல்லவி

                        தோத்திரம் செய்வேனே-ரட்சகனைத்
                        தோத்திரம் செய்வேனே

அனுபல்லவி

            பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணைவைத்த
            பார்த்திபனை[1] யூதக் கோத்திரனை, என்றும் - தோத்திரம்

சரணங்கள்

1.         அன்னை மரி சுதனை,-புல் மீது
            அமிழ்துக் கழுதவனை,
            முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை,
            முன்னுரை நூற்படி, இந்நிலத் துற்றோனை. - தோத்திரம்

2.         கந்தை பொதிந்தவனை,-வானோர்களும்
            வந்தடி பணிபவனை,
            மந்தையர்க் கானந்த மாட்சியளித்தோனை
            வான பரன் என்னும் ஞான குணவானை. - தோத்திரம்

3.         செம்பொன் னுருவானைத்,-தேசிகர்கள்
            தேடும் குருவானை,
            அம்பர மேவிய உம்பர் கணத்தோடு
            அன்பு பெற நின்று, பைம் பொன் மலர் தூவி. - தோத்திரம்

-தஞ்சை சத்தியநாதன்


[1] அரசனை

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு