ஆமென் அல்லேலூயா மகத்துவத் தம்பராபரா


ஆமென் அல்லேலூயா

67. (114) சங்கராபரணம்               திஸ்ர ஏகதாளம்

பல்லவி

             ஆமென், அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா;
            ஆமென், அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த தோத்திரா.

அனுபல்லவி

                        ஓம்[1] அனாதி தந்தார், வந்தார், இறந்
                        துயிர்த்தெழுந்தாரே, உன்னதமே! - ஆமென்

சரணங்கள்

1.         வெற்றிகொண் டார்ப்பரித்து-கொடும்வே
            தாளத்தைச் சங்கரித்து,-முறித்து;
            பத்ராசனக்[2] கிறிஸ்து-மரித்து,
            பாடுபட்டுத்தரித்து, முடித்தார். - ஆமென்

2.         சாவின் கூர் ஒடிந்து,-மடிந்து,
            தடுப்புச் சுவர் இடிந்து,-விழுந்து,
            ஜீவனே விடிந்து,-தேவாலயத்
            திரை ரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது. - ஆமென்

3.         வேதம் நிறைவேற்றி,-மெய் தோற்றி,
            மீட்டுக் கரையேற்றி,-பொய் மாற்றி,
            பாவிகளைத் தேற்றி,-கொண்டாற்றி,
            பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார். - ஆமென்

-வேதநாயகம் சாசுதிரியார்


[1] திருவார்த்தை
[2] தலைமை ஆசனம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு