மகிழ் மகிழ் மந்தையே


மகிழ் மகிழ் மந்தையே

70. (118) பூரிகல்யாணி                         ஆதிதாளம்

பல்லவி

             மகிழ், மகிழ், மந்தையே, நீ; அல்லேலூயா! பரன்
            மைந்தன் பரமேறினார், அல்லேலூயா!

அனுபல்லவி

          மகிழ், மகிழ்; பரன் மைந்தன் மகத்துவ பரமேறினார்;
            திகழ் திருச்சேனை பாடும் அல்லேலூயா, இன்று. - மகிழ்

சரணங்கள்

1.         வானமெல்லாம் நிரப்ப மனுஷ மைந்தன் எல்லா
            வானங்கள் மேலேறினார், அல்லேலூயா!
            தீனதயாளு நம்மைச் சேர்ந்த தலைவராயினார்,
            ஞானமுடன் பாடுங்கள், அல்லேலூயா, இன்று - மகிழ்

2.         ஏசுபரன் நமக்கு இறையானார்; இது
            எல்லாவர்க்குஞ் சந்தோஷம், அல்லேலூயா!
            வாசம் நாம் செய்யத் தந்தை வளவில்[1] இடம்பிடித்த
            நேசமுன்னத நேசம், அல்லேலூயா, இன்று - மகிழ்

3.         தந்தை வலப்பாகத்தில் சத்திய கிறிஸ்து எங்கள்
            சத்துருக்கள் மேற்சிறந்தார், அல்லேலூயா!
            சொந்தக் காயங்கள் காட்டிச் சுகிர்தமுடன் ஜெபிப்பார்;
            மந்தையே, உந்தனுக்காய் அல்லேலூயா, இன்று - மகிழ்

4.         மோட்ச சுதந்தரர் நாம் வானோருக்கும் ஒப்பர்,
            முடிவில்லாப் பாக்கியர் நாம், அல்லேலூயா!
            பாழ்ஜெகம் நிலையல்ல, பரம சஞ்சாரிகள் நாம்
            சூட்சுமக் கர்த்தனுக்கே அல்லேலூயா, இன்று - மகிழ்

5.         பூதலமந்தமட்டும் உங்களுடனே நித்தம்
            புனிதன் இருப்பேனென்றார்; அல்லேலூயா!
            ஏதெமக்குக் குறைச்சல் ஏசெங்களோடிருந்தால்,
            யாதுமோசந்தொடரும்? அல்லேலூயா, இன்று - மகிழ்

- ஞா. சாமுவேல்


[1] வீட்டில்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு