இந்த வேளையினில் வந்தருளும்


இந்த வேளையினில் வந்தருளும்

113. (130) நாதநாமக்கிரியை                                    சாபு தாளம்

சரணங்கள்

1.         இந்த வேளையினில் வந்தருளும், தேவ ஆவியே!-இப்போ
            எங்கள் மீதிறங்கித், தங்கி வரம் தாரும், ஆவியே.

2.         அந்தணர் தம்மிடம் விந்தை செய்த சத்ய ஆவியே!-முன்
            ஆச்சரியமாகக் காட்சி தந்த ஞான ஆவியே.

3.         ஆர்ச்சியர்க் கந்நாளில் அற்புதம் செய்தாண்ட ஆவியே!-இந்த
            ஆதிரை மீதினில் தீதகற்றியாளும், ஆவியே.

4.         ஆருமறியாத ஆறுதல் செய்திடும் ஆவியே!-இங்கு
            அஞ்ஞானம் அகற்றி, மெய்ஞ்ஞானம் புகட்டும், ஆவியே

5.         சித்தம் இரங்காயோ, நித்தியராகிய ஆவியே!-அருள்
            ஜீவ வழி காட்டிப் பாவம் அகற்றிடும், ஆவியே.

6.         வாரும், வாரும்; கண் பாரும், பரிசுத்த ஆவியே!-இன்று
            வந்து சபை மீதில் சிந்தை வைத்தருளும், ஆவியே.

7.         தேற்றரவாளன் என்றேற்றிப் புகழ்ந்திடும் ஆவியே!-நிதம்
            சித்தம் வைத்தென் மீதில் முற்றிலும் காத்திடும், ஆவியே.

-ச. யோசேப்பு

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு