ஏசு கிறிஸ்து நாதர்


எல்லோர்க்கும் இரட்சகர்

109. (351) கேதாரம்                                       ஆதி தாளம்

பல்லவி
                        ஏசு கிறிஸ்து நாதர்
                        எல்லாருக்கும் ரட்சகர்.

சரணங்கள்

1.         மாசில்லாத மெய்த்தேவன்
            மானிடரூ புடையார்;
            யேசுகிறிஸ்துவென்ற
            இனிய நாமமுடையார்; - ஏசு

2.         வம்பு நிறைந்த இந்த
            மானிட ஜாதகள்மேல்
            அன்பு நிறைந்த கர்த்தர்
            அதிக உருக்கமுள்ளோர்; - ஏசு

3.         பாவத்தில் கோபம் வைப்பார்!
            பாவிமேல் கோபம் வையார்,
            ஆவலாய் நம்பும் பாவிக்
            கடைக்கலம் ஆக நிற்பார்; - ஏசு

4.         தன்னுயிர் தன்னை விட்டுச்
            சருவ லோகத்திலுள்ள
            மன்னுயிர்களை மீட்க
            மரித்தே உயிர்த்த கர்த்தர்; - ஏசு

5.         அந்தர வானத்திலும்
            அகிலாண்ட கோடியிலும்
            எந்தெந்த லோகத்திலும்
            இவரிவரே ரட்சகர். - ஏசு

- பாக்கியநாதன் தாவீது

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு