எழுந்தருளும் ஏசு சுவாமி


எழுந்தருளும் ஏசு சுவாமி

66. (111) பூபாளம்                                          ஆதி தாளம்

பல்லவி

                        எழுந்தருளும் ஏசு சுவாமி

அனுபல்லவி
                        விழுந்தலகை அழிந்தொழியத்
                        தொழுஞ் சுரரும்[1] வரல் ஆச்சே - எழுந்

சரணங்கள்

1.         இஸ்திரீகள் கந்தவர்க்கம் எடுத் தேந்தி, பிரேதலங்கா
            ரத்தின முறை நாடி, இதோ! ஆசரிக்க வந்தாரே. - எழுந்

2.         மகதலா ஊர் மரியாள் மகிழ்ந்து தரிசித் தேற்ற,
            அகமகிழ்ந்தப் போஸ்தலர்கள் அதிசயித்துப் போற்ற. - எழுந்

3.         பாடுபட்டு மரித்தடக்கப் பட்ட தினம் மூன்றாச்சே,
            ஏடுமுட்ட வரைந்த தெல்லாம் நிறைவேறி முடித்தாச்சே - எழுந்

4.         முத்திரையும் காவல்களும் மூடிய கல்லதும் நீங்கி,
            சத்துருக்கள் நடுநடுங்கித் தயங்கி மனங் கலங்க. - எழுந்

5.         வேதாளம் நடுங்கி விழ, விண்ணோர் திரண்டு தொழ,
            பாதாளம் இடிந்து விழப், பராபரனே, எழுந்தருளும். - எழுந்

6.         விஸ்தார உலகமதில், மெய்யான திருச்சபையில்,
            தோத்ர சங்கீர்த்தனம் எந்நாளும் உண்டாக. - எழுந்

- வே. சாஸ்திரியார்


[1] தேவதூதரும்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு