சுத்தபரன் சுத்த ஆவியே


சுத்தபரன் சுத்த ஆவியே

114. (67 L) ஆனந்தபைரவி                    ரூபக தாளம்

பல்லவி

                   சுத்தபரன் சுத்த ஆவியே நின்மாமகிமை
                   சொல்லவரம் எனக்கீவையே.

அனுபல்லவி

                        மெத்தவும் அசுத்தன் நானே
                        மேவினேன் நின் பாதந்தானே,
                        உத்தமனம் கெஞ்சுவேனே,
                        உன்னையல்லா லழிவேனே. - சுத்த

சரணங்கள்

1.         அடியேன் புத்திபலத்தினால் என் ஆத்மமீட்பர்
            அருளைப் பெறவும் போகுமோ?
            மிடியுறும் ஏழைச்சிஷ்டி தான் மனந்திரும்பி
            விசுவாசங் கொள்ளலாகுமோ?

                        கடினம் என் மனங்கல்லு,
                        கத்தா ஓர் வார்த்தை சொல்லு,
                        திடசீவன் வரக்கொல்லு,
                        சேவடி நீ சேர்த்துக்கொள்ளு - சுத்த

2.         சுவிசேடத்தின் தொனியினால் எனையழைக்கும்
            சுகிர்தந்தனை யானறிந்தேன்,
            உவந்தளிக்கும் வரங்களால் என் இதயத்துக்
            கொளிதருவதை யுணர்ந்தேன்.
           
                        அவமாகா மெய்விஸ்வாசம்,
                        அதனால் தூய்மை நன்னேசம்,
                        கவர்ந்துனைத் தொழும்பாசம்,
                        கனிந்தளித்தாய் நல்வாசம். - சுத்த

3.         பூமியெங்கும் உள்ள சபையை வரவழைத்துப்
            பொற்புற[1] விணைத்துச் சேர்த்துச்
            சாமியொளிதந்து தூய்மை அளித்துயேசு
            தற்பரனில் நித்தங்காத்து

                        க்ஷேமகரஞ்செய்யும் நேயா,
                        தின்மையைப் பகைக்குந் தூயா,
                        பாமரர்க்கு நற்சகாயா,
                        பார்த்திபா என்றென்றும் மாயா. - சுத்த

4.         நித்தமும் பவம் பொறுக்கிறாய் திருச்சபையில்
            நீதிதீர்வை நாளிலேயன்பாய்ச்
            செத்த விசுவாசிகளையும் என்னையும் உடல்
            ஜீவனோடெழுப்புவாய் இன்பாய்.

                        நித்திய ஜீவன் தருவாய்,
                        நின்மலன் யேசுவை மெய்யாய்ப்
                        பத்தியாகவே மனம்வாய்
                        பற்றினோர்க்கு மா தயவாய். - சுத்த  

- ஞா. சாமுவேல்


[1] மாட்சியுள்ள ஐக்யம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு