இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார்


இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார்

69. (113) சங்கராபரணம்                                  திஸ்ர ஏகதாளம்

1.         இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார், கம்பீரமாய்
            இகல்[1] அலகை[2] சாவும் வென்றதிக வீரமாய்,
            மகிழ் கொண்டாடுவோம்,
            மகிழ் கொண்டாடுவோம்.

2.         போர்ச்சேவகர் சமாதி சூழ்ந்து காவலிருக்க,
            புகழார்ந்தெழுந்தனர், தூதன் வந்து கல்மூடிப் பிரிக்க - மகிழ்

3.         அதி காலையில் சீமோனொடு யோவானும் ஓடிட,
            அக்கல்லறையினின் றேகினார் இவர் ஆய்ந்து தேடிட - மகிழ்

4.         பரி சுத்தனை அழிவுகாண வொட்டீர், என்று முன்
            பகர் வேதச்சொற்படி பேதமற்றெழுந்தார் திருச்சுதன் - மகிழ்

5.         இவ்வண்ணமாய்ப் பரன் செயலை எண்ணி நாடுவோம்;
            எல்லோருமே களி கூர்ந்தினிதுடன் சேர்ந்துபாடுவோம். - மகிழ்

- யோ. பால்மர்


[1] பகை
[2] பிசாசு

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு