ஏசுவையே துதிசெய் நீ மனமே


ஏசுவையே துதிசெய்

80. (56) எதுகுலகாம்போதி                              ஆதிதாளம்

பல்லவி

            ஏசுவையே துதிசெய் நீ, மனமே,
            ஏசுவையே துதிசெய்,-கிறிஸ் தேசுவையே,

சரணங்கள்

1.         மாசணுகாத பராபர வஸ்து,
            நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து, - ஏசுவையே

2.         அந்தரவான் தரையுந் தரு தந்தன்,
            சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன். - ஏசுவையே

3.         எண்ணின காரியம் யாவும் முகிக்க[1]
            மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க. - ஏசுவையே

- வே. சாஸ்திரியார்


[1] முடிக்க

Comments

  1. Replies
    1. மென்பொருள் தயாரிக்கும் எண்ணமும் உள்ளது. நன்றி!

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு