Posts

Showing posts from October, 2018

ஆ மேசியாவே வாரும்

330. Cruger, Meirionydd         7, 6, 7, 6, D. "Hail to the Lord's Anointed" 1.           ஆ மேசியாவே வாரும்,                         தாவீதின் மா மைந்தா !             பார் ஆள ஏற்ற காலம்                         நீர் வந்தீர் மா கர்த்தா;             சிறைகளையே மீட்டு                         கொடுங்கோல் முறிப்பீர்;             சிறப்பாய் நீதி செய்து                         பாவமும் போக்குவீர் . 2.          நிஷ்டூரம் யாவும் நீக்கி                         சகாயம் நல்குவீர்;             கஷ்டத்தில் ஏழை தேற்றி,                         நல் பலம் ஈகுவீர்;             மாய்வோர் திரளை மீட்டு                         களிப்பால் நிரப்பி ,             உய்விப்பீர் ஒளி ஈந்து                         இருளை அகற்றி . 3.          நல் மாரிபோல் நீர் வாரும்                         இப்பூமி செழிக்க;             நம்பிக்கை மகிழ்வன்பும்                         எங்கெங்கும் மலர;             நாதர் முன் தூதனாக                

ஆண்டவா உமக்கே ஸ்தோத்ரம்

329. Austria                                                               8, 7, 8, 7, D. 1.           ஆண்டவா, உமக்கே ஸ்தோத்ரம்,                         அடியேனைக் காத்தீரே             மீண்டும் என்னை உமக்கேற்ற                         சேவை செய்ய கொள்வீரே;             என் இதயம் மனம் செயல்                         யாவும் உம்மைத் துதிக்கும்;             ஆண்டவா, உமக்கே ஸ்தோத்திரம்!                         அடியேனை ஆட்கொள்ளும். 2.          இவ்வுலக வாழ்நாள் எல்லாம்                         நான் உமக்காய் வாழவும்             அன்பு, தியாகம், அருள், பக்தி                         அனைத்தும் பெற்றோங்கவும்,             பாவ அழுக்கெல்லாம் நீக்கி                         தூய பாதை செல்லவும்,             ஆண்டவா, உம் அருள் தாரும்                         அடியேனை ஆட்கொள்ளும். 3.          வியாதி, துக்கம், தொல்லை வந்தால்                         உம்மை நோக்கிக் கெஞ்சுவேன்;             உம் பிரசன்னம் எனக்கின்பம்                         சாவுக்கும் நான் அஞ்சிடேன்;       

நள்ளிரவில் மா தெளிவாய்

Image
328. Noel                                                                                D.C.M. "It came upon the mid-night clear" 1.           நள்ளிரவில் மா தெளிவாய்                         மாண் பூர்வ கீதமே             விண் தூதர் வந்தே பாடினார்                         பொன் வீணை மீட்டியே;             “மாந்தர்க்கு சாந்தம் நல் மனம்                         ஸ்வாமி அருளாலே”             அமர்ந்தே பூமி கேட்டதாம்                         விண் தூதர் கீதமே. 2.          இன்றும் விண் விட்டுத் தூதர்கள்                         தம் செட்டை விரித்தே,             துன்புற்ற லோகம் எங்குமே                         இசைப்பார் கீதமே;             பூலோகக் கஷ்டம் தாழ்விலும்                         பாடுவார் பறந்தே;             பாபேல் கோஷ்டத்தை அடக்கும்                         விண் தூதர் கீதமே. 3.         விண்ணோரின் கீதம் கேட்டுப்பின்                         ஈராயிரம் ஆண்டும்,             மண்ணோரின் பாவம் பகை போர்                         பூலோகத்தை இன்றும்

ஓ பெத்லகேமே சிற்றூரே

327. Forest Green  Christmas Carol.                                             D.C.M. "O little Town of Bethlehem" 1.           ஓ பெத்லகேமே சிற்றூரே                         என்னே உன் அமைதி!             அயர்ந்தே நித்திரை செய்கையில்                         ஊர்ந்திடும் வான் வெள்ளி,             விண் வாழ்வின் ஜோதி தோன்றிற்றே                         உன் வீதியில் இன்றே;             நல்லோர் நாட்டம் பொல்லார் கோட்டம்                         உன் பாலன் இயேசுவே. 2.          கூறும், ஓ விடி வெள்ளிகாள்!                         இம் மைந்தன் ஜன்மமே;             விண் வேந்தர்க்கு மகிமையே,                         பாரில் அமைதியாம்             மா திவ்விய பாலன் தோன்றினார்                         மண் மாந்தர் தூக்கத்தில்,             விழித்திருக்க தூதரும்                         அன்போடு வானத்தில். 3.          அமைதியாய் அமைதியாய்                         விண் ஈவு தோன்றினார்;             மாந்தர்க்கு ஸ்வாமி ஆசியும்                         அமைதியால்

நற்செய்தி மேசியா இதோ

326. Bristol, St. Stephen                                                                  C.M. "Hark! the glad sound the Saviour Comes." 1.           நற்செய்தி! மேசியா இதோ!                         ஆவலாய் நோக்குவோம்;             பற்றோடு ஏற்று ஆன்மாவில்                         ஆனந்தம் பாடுவோம். 2.          வல்லோனால் சிறையானோரை                         வல் சிறை நீக்குவார்             நில்லாதே எவ்விரோதமும்                         பொல்லாங்கை மேற்கொள்வார். 3.          நருங்குண்டோரை ஆற்றியே                         நலிவை நீக்குவார்;             பரத்தின் பாக்கிய செல்வத்தால்                         இரவோர் வாழ்விப்பார். 4.          ஓசன்னா! ஆர்க்கும் ஓசன்னா!                         சாந்த இவ்வேந்தர்க்கும்;             இயேசுவின் இன்ப நாமமே                         பாடுவார் விண்ணோரும்.

இம்மானுவேல் வாரும் வாருமே

325. Veni Emmanuel         10, 10, 10, 10, with refrain. "O come, O come, Emmanuel." 1.          இம்மானுவேல் வாரும், வாருமே,             மெய் இஸ்ரவேலைச் சிறை மீளுமே;             மா தெய்வ மைந்தன் தோன்றும் வரைக்கும்             உன் ஜனம் பாரில் ஏங்கித் தவிக்கும்,             மகிழ்! மகிழ்! சீயோனின் சபையே,             இம்மானுவேலின் நாள் சமீபமே. 2.          ஈசாயின் வேர்த் துளிரே, வாருமே,             பிசாசின் வல்ல கோஷ்டம் நீக்குமே;             பாதாள ஆழம் நின்று ரட்சியும்,             வெம் சாவின்மேல் பேர் வெற்றி அளியும். 3.          அருணோதயமே, ஆ! வாருமே,             வந்தெங்கள் நெஞ்சை ஆற்றித் தேற்றுமே;             மந்தார ராவின் மேகம் நீக்கிடும்,             இருண்ட சாவின் நிழல் ஓட்டிடும். 4.          தாவீதின் திறவுகோலே, வாருமே,             விண் வாசலைத் திறந்து தாருமே;             ஒடுக்கமாம் நல் வழி காத்திடும்,             விசாலமாம் துர்ப் பாதை தூர்த்திடும். 5.          மா வல்ல ஆண்டவா, வந்தருளும்;             முற்காலம் சீனாய் மலை

மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம்

324. Hnover                                                               10, 10, 11, 11. "O worship the King all glorious above" 1.           மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம்,             வல்லவர் அன்பர் பாடிப்போற்றுவோம்;             நம் கேடகம் காவல் அனாதியானோர்,             மகிமையில் வீற்றுத் துதி அணிந்தோர். 2.          சர்வ வல்லமை தயை போற்றுவோம்,             ஒளி தரித்தோர், வானம் சூழ்ந்தோராம்;             குமுறும் மின் மேகம் கோப ரதமே;             கொடும் கொண்டல் காற்றிருள் சூழ் பாதையே 3.          மா நீச மண்ணோர் நாணல் போன்றோர் நாம்;             என்றும் கைவிடீர் உம்மை நம்புவோம்;             ஆ! உருக்க தயை! முற்றும் நிற்குமே;             மீட்பர் நண்பர் காவலர் சிருஷ்டிகரே. 4.          ஆ, சர்வ சக்தி! சொல்லொண்ணா அன்பே!             மகிழ்வாய் விண்ணில் தூதர் போற்றவே,             போற்றிடுவோம் தாழ்ந்தோர் நாம் அற்பர் என்றும்,             மெய் வணக்கமாய் துதி பாடலோடும்.

ஆத்மமே உன் ஆண்டவரின்

323. Alleluya dulce cermen  Praise my soul                    8, 7, 8, 7, 8, 7. "Praise my soul the King of Heaven" 1.           ஆத்மமே, உன் ஆண்டவரின்                         திருப்பாதம் பணிந்து,             மீட்பு, சுகம், ஜீவன், அருள்                         பெற்றதாலே துதித்து,             அல்லேலூயா, என்றென்றைக்கும்                         நித்திய நாதரைப் போற்று. 2.          நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற                         தயை நன்மைக்காய்த் துதி;             கோபங்கொண்டும் அருள் ஈயும்                         என்றும் மாறாதோர் துதி;             அல்லேலூயா, அவர் உண்மை                         மா மகிமையாம், துதி. 3.          தந்தைபோல் மாதயை உள்ளோர்;                         நீச மண்ணோர் நம்மையே             அன்பின் கரம் கொண்டு தாங்கி                         மாற்றார் வீழ்த்திக் காப்பாரே;             அல்லேலூயா, இன்னும் அவர்                         அருள் விரிவானதே. 4.          என்றும் நின்றவர் சமூகம்                         ப

தேவன் தந்த ஈவுக்காக

322. Deerhurst, Nettleton             8s, 7s, 8l. "Gratitude" 1.           தேவன் தந்த ஈவுக்காக                    என்றென்றைக்கும் தோத்திரம்!             விண்ணோர், மண்ணோர் கூட்டமாக                         பாடுவார் சங்கீர்த்தனம்,             மீட்கப்பட்ட யாவராலும்                         ஏக தேவரீருக்கே             ஆரவாரமாய் என்றைக்கும்                         தோத்திரம் உண்டாகவே!