லோக நாதா மண்ணோர் மீள


256. Charitas                       (418)       8s, 7s, 8l.

"Lord of glory, who hast bought us"

1.         லோக நாதா, மண்ணோர் மீள
                        உம்தன் ரத்தம் சிந்தினீர்,
            கெட்டுப்போனோர் என்றும் வாழ
                        உம்மைப் பலியாக்கினீர்;
            நன்றிகெட்ட மாந்தர்க்கென்றும்
                        தயவாக, தேவரீர்
            எண்ணிறந்த நன்மை சற்றும்
                        கைமாறின்றி ஈகிறீர்.

2.         உம்தன் நேசக் காந்தியாலும்
                        எங்கள் நெஞ்சுருகியே,
            அன்பில்லாத தன்மை யாவும்
                        நீங்கச் செய்யும், யேசுவே;
            அதால் நாங்கள் ஏற்பதிலும்
                        ஈதல் நன்றென்றுணர்வோம்;
            நீரே தந்த ஆஸ்தியிலும்
                        தான தர்மம் பண்ணுவோம்.

3.         சிறியோர்க்குச் செய்த நன்மை
                        உமக்கிட்ட தர்மமே
            என்றந்நாள் நீர் சொல்லும்வாக்கை
                        கேட்பதின்ப பாக்யமே;
            சொத்து செல்வம் ஏதும் அற்ற
                        எளியோரால் தேவரீர்
            தான தர்மங் கேட்பதாக
                        இதினாலே போதித்தீர்.

4.         லோக நாதா, மண்ணோர் மீள
                        உம்தன் ரத்தஞ் சிந்தினீர்;
            கெட்டுப்போனோர் என்றும் வாழ
                        உம்மைப் பலியாக்கினீர்;
            உம்மை அண்டிப்பற்றிக் கொள்ள
                        நம்பிக்கை விஸ்வாசமும்
            மா சிறந்த மேன்மையுள்ள
                        திவ்ய அன்பும் ஈந்திடும்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு