இம்மானுவேல் வாரும் வாருமே


325. Veni Emmanuel         10, 10, 10, 10, with refrain.

"O come, O come, Emmanuel."

1.         இம்மானுவேல் வாரும், வாருமே,
            மெய் இஸ்ரவேலைச் சிறை மீளுமே;
            மா தெய்வ மைந்தன் தோன்றும் வரைக்கும்
            உன் ஜனம் பாரில் ஏங்கித் தவிக்கும்,
            மகிழ்! மகிழ்! சீயோனின் சபையே,
            இம்மானுவேலின் நாள் சமீபமே.

2.         ஈசாயின் வேர்த் துளிரே, வாருமே,
            பிசாசின் வல்ல கோஷ்டம் நீக்குமே;
            பாதாள ஆழம் நின்று ரட்சியும்,
            வெம் சாவின்மேல் பேர் வெற்றி அளியும்.

3.         அருணோதயமே, ஆ! வாருமே,
            வந்தெங்கள் நெஞ்சை ஆற்றித் தேற்றுமே;
            மந்தார ராவின் மேகம் நீக்கிடும்,
            இருண்ட சாவின் நிழல் ஓட்டிடும்.

4.         தாவீதின் திறவுகோலே, வாருமே,
            விண் வாசலைத் திறந்து தாருமே;
            ஒடுக்கமாம் நல் வழி காத்திடும்,
            விசாலமாம் துர்ப் பாதை தூர்த்திடும்.

5.         மா வல்ல ஆண்டவா, வந்தருளும்;
            முற்காலம் சீனாய் மலை மீதிலும்
            எக்காளம் மின்னலோடு தேவரீர்
            பிரமாணம் இஸ்ரவேலுக் களித்தீர்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு