நான் தூதனாக வேண்டும்


301. Angel's Story 

Day of Rest.                                       7s, 6s, 8l.

"I want to be an angel"

1.         நான் தூதனாக வேண்டும்
                        விண் தூதரோடேயும்;
            பொற் கிரீடம் தலைமேலும்
                        நல் வீணை கையிலும்
            நான் வைத்துப் பேரானந்தம்
                        அடைந்து வாழுவேன்;
            என் மீட்பரின் சமுகம்
                        நான் கண்டு களிப்பேன்.

2.         அப்போது சோர்வதில்லை,
                        கண்ணீரும் சொரியேன்;
            நோய், துக்கம், பாவம், தொல்லை,
                        பயமும் அறியேன்;
            மாசற்ற சுத்தத்தோடும்
                        விண் வீட்டில் தங்குவேன்;
            துதிக்கும் தூதரோடும்
                        நான் என்றும் பாடுவேன்.

3.         ப்ரகாசமுள்ள தூதர்
                        நான் சாகும் நேரத்தில்
            என்னைச் சுமந்து போவார்
                        என் யேசுவண்டையில்
            நான் பாவியாய் இருந்தும்
                        என் மீட்பர் மன்னித்தார்
            எண்ணில்லாச் சிறியோரும்,
                        என்னோடு வாழுவார்.

4.         மேலான தூதரோடும்
                        நான் தூதன் ஆகுவேன்,
            பொற் கிரீடம் தலைமேலும்
                        தரித்து வாழுவேன்;
            என் மீட்பர் முன் ஆனந்தம்
                        நான் பெற்று வாழ்வதே
            வாக்குக் கெட்டாத இன்பம்,
                        அநந்த பாக்யமே.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு