சமஸ்த மண்டலத்தையும்


313. Hursley.                                                                         C.M.

"Prayer for rain"

1.         சமஸ்த மண்டலத்தையும்   
                   படைத்த நாதனே
            சமஸ்த ஜீவ ஜெந்தையும்
                        போஷிக்கும் தேவனே.

2.         உம்மாலே நாங்கள் இம்மட்டும்
                        ஜீவித்து வாழ்கிறோம்;
            ஊண், உடை, சுகம், பெலனும்
            உம்மால் அடைகிறோம்.

3.         இதை அறிந்தும் வீணராய்
                        நடந்து சீர் கெட்டோம்;
            தண்டனைக்கேற்ற நீசராய்
                        பொல்லாங்கில் நாள் விட்டோம்.

4.         இரக்கமுள்ள தேவனே
                        வருந்திச் சாகிறோம்;
            திருத்தி எம்மை ஆளவே
                        பணிந்த கேட்கிறோம்.

5.         அருள் பொழியும் மாரியை
                        சொரியும், கர்த்ததே;
            முடிவில் மோட்சானந்தத்தை
                        அடியார்க் கீயுமே.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு