பிதா சுதன் ஆவியே


242. Tichfield                (416)               7s, 8l.

"One Lord, one faith, one baptism"

1.         பிதா, சுதன், ஆவியே,
            ஏகரான தேவனே,
            கேளும் நெஞ்சின் வேண்டலை
            தாரும் சமாதானத்தை;
            அன்புக்கேற்ற உணர்வும்
            அந்நியோந்த ஐக்யமும்
            ஈந்து ஆசீர்வதியும்,
            திவ்ய நேசம் ஊற்றிடும்.

2.         உம்தன் அடியாரை நீர்
            ஒரே மந்தையாக்குவீர்;
            ஒரே ஆவியும் உண்டே,
            விசுவாசமும் ஒன்றே,
            ஒன்றே எங்கள் நம்பிக்கை
            ஐக்கியமாக்கி எங்களை
            ஆண்டு கொள்ளும், கர்த்தரே,
            ஏக சிந்தை தாருமே.

3.         மீட்டுக் கொண்ட ஆண்டவா
            அந்நியோந்ய காரணா,
            ஜீவ நேசா, தேவரீர்
            வேண்டல் கேட்டிரங்குவீர்;
            பிதா, சுதன் ஆவியே,
            ஏகரான தேவனே,
            உம்தன் திவ்ய ஐக்யமும்
            தந்து ஆட்கொண்டருளும்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு