225. Herr Christ, Der Einge - Gott'ssohn, Vittoria 7, 6, 7, 6, 7, 7, 6
"Herr Jesu, Gnadensonne"
1. அருளின்
ஜோதியான
அன்புள்ள யேசுவே,
நரரின் ஜீவனான
உம்மாலே என்னிலே
வெளிச்சமும் குணமும்
சந்தோஷமும் திடமும்
உண்டாகித் தங்குமே.
2. என் பாவத்தை மன்னித்து
அகற்றியருளும்,
சினத்தை நீக்கி விட்டு
என் மேல் அன்பாய் இரும்;
என் நெஞ்சின் பயம் நீங்க
மெய்ச் சமாதானம் தர
பணிந்து கேட்கிறேன்.
3. நான் உம்மைச் சார்ந்தோனாக
எப்போதும் உண்மையில்
நிலைக்கும்படியாக
மெய்ப் பக்தியை என்னில்
வளரச் செய்தன்பாலே
தெய்வீக வார்த்தையாலே
நீர் பாதை காட்டுமேன்.
4. நான் லோகத்தை வெறுத்து,
என் நெஞ்சை நித்தமே
காணிக்கையாய் உமக்கு
படைத்து வாழவே
துர் ஆசை என்னில் பேர்த்து,
உம்மண்டை என்னைச் சேர்த்து
சுத்தாங்கம் தாருமேன்.
No comments:
Post a Comment