துள்ளித் துள்ளிப் பாலனே


297. Warnborough, Vienna Madura         7s.

"Children's joy"

1.         துள்ளித் துள்ளிப் பாலனே,
            கீதம் பாடிப் பாடியே;
            யேசுவண்டை ஓடி வா,
            நேசர் அவர் அல்லவா?

2.         பெத்லேகேமில் பிறந்தார்,
            பெற்றோருக்கு அமைந்தார்;
            தீயதான குணங்கள்
            உண்டோ? இல்லை, அவரில்.

3.         சிறு பிள்ளை நீயும் வா
            நெஞ்சை யேசுவுக்குத் தா;
            அவர் கையில் ஏந்துவார்;
            ஆசீர்வாதம் தருவார்.

4.         வாரும், சிறு பாலரே,
            அஞ்ச வேண்டாம், நேசரே;
            பயம், துக்கம் நீக்குவார்,
            கண்ணீர் யாவும் துடைப்பார்.

5.         பேதையான பிள்ளையும்
            தாழ்ந்த சிந்தையுள்ளோரும்
            மோட்ச வீட்டில் நேசராம்
            அவர் மூலம் சேரலாம்.

6.         பொற் கிரீடம் அவரே
            சூட்டுவார் என் தோழரே
            தேவதூதரோடு நீர்
            கீதம் பாடிப் போற்றுவீர்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு