நீ சாய்ந்து தூங்கு பிள்ளையே


307. Evan, Sphor                                                                  C.M.

"Nun Schlaf, mein liebes Kindelein"

1.         நீ சாய்ந்து தூங்கு பிள்ளையே,
                      கண்மூடு, கண்ணே; நீ
            அஞ்சாதே, மோசம் இல்லையே
                        கர்த்தாவின் கண்மணி.

2.         பிதா தாமே உன் பக்கத்தில்
                        துணையாய் நிற்கிறார்;
            அவரே உன்னைக் காக்கையில்
                        பொல்லாங்கு செய்வதார்?

3.         குமாரன் கெட்டுப் போனதை
                        ரட்சிக்கவே வந்தார்;
            உனக்குச் சுவிகாரத்தை
                        அளிக்க மரித்தார்.

4.         தேவாவி உன்னில் தங்குவார்
                        உன்னை நடத்துவார்;
            எந்நாளும் உன்னைத் தாங்குவார்
                        பேரின்பம் அளிப்பார்.

5.         நீ சாய்ந்து தூங்கு, பிள்ளையே,
                        கண்மூடு, கண்ணே; நீ
            அஞ்சாதே, மோசம் இல்லையே,
                        கர்த்தாவின் கண் மணி.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு