26 October 2018

கர்த்தர் என் பக்கமாகில்


212. St. Theodulph, Aurelia                                     7s, 6s, 8l.

"Ist Gott fur mich, so trete"

1.         கர்த்தர் என் பக்கமாகில்,
                        எனக்குப் பயம் ஏன்?
            உபத்ரவம் உண்டாகில்
                        மன்றாடிக் கெஞ்சுவேன்;
            அப்போதென்மேலே வந்த
                        பொல்லா வினை எல்லாம்
            பலத்த காற்றடித்த
                        துரும்புபோலே ஆம்.

2.         என் நெஞ்சின் அஸ்திபாரம்
                        மேலான கர்த்தரே;
            அதாலே பக்தர் யாரும்
                        திடன் கொள்வார்களே;
            நான் ஏழைப் பலவீனன்,
                        வியாதிப் பட்டோனே;
            அவரில் சொஸ்தம், ஜீவன்
                        சமஸ்தமும் உண்டே.

3.         என் உள்ளமே களிக்கும்,
                        துக்கிக்க வேண்டுமோ?
            கர்த்தர் என் மேல் உதிக்கும்
                        பகலோன் அல்லவோ?
            பரத்தில் வைக்கப்பட்ட
                        ஆனந்த பூரிப்பே
            என் ஆவிக்கு பலத்த
                        திடன் உண்டாக்குமே.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...