மின்னும் வெள்ளங்கி பூண்டு


292. Alford                                                    (428)  7, 6, 8, 6, 8l.

"The thousand times ten thousand"

1.         மின்னும் வெள்ளங்கி பூண்டு
                        மீட்புற்ற கூட்டத்தார்
            பொன்னகர் வீதி எங்குமே
                        பண்பாக நிற்கிறார்;
            வெம் பாவம் சாவை எல்லாம்
                        வென்றே போர் ஓய்ந்தாரே;
            செம் பொன்னாம் வாசல் திறவும்
                        செல்வார் இவர் உள்ளே.

2.         முழங்கும் அல்லேலூயா
                        மண் விண்ணை நிரப்பும்!
            விளங்கும் கோடி வீணைகள்
                        விஜயஞ் சாற்றிடும்!
            சராசரங்கள் யாவும்
                        சுகிக்கும் நாள் இதே;
            தராதலத்தின் துன்பமும்
                        தொலைந்து போயிற்றே!

3.         அன்பான நண்பர் கூடி
                        ஆனந்தம் அடைவார்;
            மாண்பான நேசம் எந்நாளும்
                        மங்காமல் வாழுவார்;
            கண்ணீர் வடித்த கண்கள்
                        களித்திலங்கிடும்;
            அண்ணலே தஞ்சம், ஆகையால்
                        அபாயம் நீங்கிடும்.

4.         சிறந்த உம்தன் மீட்பை
                        சமீபமாக்குமே;
            தெரிந்து கொள்ளப்பட்டோரின்
                        தொகை நிரப்புமே;
            உரைத்த உம்தன் காட்சி
                        உயர்வில் காட்டுவீர்
            இறைவா, ஏங்குந் தாசர்க்கு
                        இரங்கி வருவீர்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு