Posts

Showing posts from July, 2013

ஆயிரம் ஆயிரம் பாடல்களை

கீதங்களும் கீர்த்தனைகளும் - 25 கிறிஸ்தவ கீர்த்தனைகள் - 231 1. ஆயிரம் ஆயிரம் பாடல்களை     ஆவியில் மகிழ்ந்தே பாடுங்களேன்!     யாவரும் தேமொழிப் பாடல்களால்     இயேசுவைப் பாடிட வாருங்களேன்.                 அல்லேலூயா! அல்லேலூயா!                 என்றெல்லாரும் பாடிடுவோம்!                 அல்லலில்லை! அல்லலில்லை!                 ஆனந்தமாய்ப் பாடிடுவோம். 2. புதிய புதிய பாடல்களைப்     புனைந்தே பண்களும் சேருங்களே     துதிகள் நிறையும் கானங்களால்     தொழுதே இறைவனைக் காணுங்களே - அல்லேலூயா 3. நெஞ்சின் நாவின் நாதங்களே     நன்றி கூறும் கீதங்களால்     மிஞ்சும் ஓசைத் தாளங்களால்     மேலும் பரவசம் கூடுங்களே - அல்லேலூயா 4. எந்த நாளும் காலங்களும்     இறைவனைப் போற்றும் நேரங்களே     சிந்தை குளிர்ந்தே ஆண்டுகளாய்     சீயோனின் கீதம் பாடுங்களே - அல்லேலூயா

பாடித் துதி மனமே

பாடித் துதி மனமே 18.     (279)                                                  ஆதிதாளம் பல்லவி                      பாடித் துதி மனமே; பரனைக் கொண்                     டாடித் துதி தினமே. அனுபல்லவி                நீடித்த காலமதாகப் பரன் எமை             நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப் - பாடி சரணங்கள்   1.          தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்             செப்பின தேவபரன் இந்தக் காலத்தில்             மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு             விளக்கின அன்பை விழைந்து தியானித்துப் -பாடி 2.         சொந்த ஜனமான யூதரைத் தள்ளித்             தொலையில் கிடந்த புறசாதியாம் எமை             மந்தையில் சேர்த்துப் பராபரன் தம்முடை             மைந்தர்களாக்கின சந்தோஷத்துக்காகப் -பாடி 3.         எத்தனை தீர்க்கர், அநேக அப்போஸ்தலர்,             எத்தனை போதகர்கள், இரத்தச் சாட்சிகள்,             எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்-கு             இத்தனையாய்க் கிருபை வைத்த நம் கர்த்தனைப் - பாடி

கண்களை ஏறெடுப்பேன்

கண்கணை ஏறெடுப்பேன் 17. பியாகு                                                     சாபுதாளம் பல்லவி              கண்களை ஏறெடுப்பேன் - மாமேருநேராய் என்             கண்களை ஏறெடுப்பேன். அனுபல்லவி                விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்             தெண்ணில்லா வொத்தாசை என்றனுக்கே வரும்.  - கண் சரணங்கள்   1.          காலைத்தள்ளாட வொட்டார்-உறங்காது காப்பவர்             காலைத்தள்ளாட வொட்டார்,             வேலையில் நின் றிஸ்ர வேலரைக் காத்தவர்             காலையும் மாலையும் கண்ணுறங்காரவர் - கண் 2.         பக்க நிழல் அவரே - எனை ஆதரித்திடும்             பக்க நிழல் அவரே             எக்கால நிலைமையும் எனைச் சேதப்படுத்தா-து             அக்கோலம் கொண்டென்னை அக்காவல் புரியவே - கண் 3.         எல்லாத் தீமைகட்கும்-என்னை விலக்கியே             எல்லாத் தீமைகட்கும்             பொல்லா உலகினில் போக்குவரத்தையும்             நல்லாத்துமாவையும் நாடோறும் காப்பவர் - கண் -த. ஐயாத்துரை கைப்பி

சுய அதிகாரா சுந்தரக் குமாரா

சுய அதிகாரா, சுந்தரக்குமாரா 15.     கமாஸ்                                                ஆதிதாளம் பல்லவி            சுய அதிகாரா, சுந்தரக் குமாரா!            சொந்த உலகந்தனைத் துறந்த மரி மைந்தனான   - சுய சரணங்கள் 1.          அகிலத்தை ஒரு சொல்லால் அமைத்தனையே,             அதையொரு பம்பரம் போலிசைத்தனையே,             துகில்போலா காயமதை லகுவாய்ச் சமைத்ததிலே             சோதி பல மாதிரியாய்த் தூக்கி அங்கிலங்க வைத்த - சுய 2.          கரை மத கற்ற குளம் புவியிலுண்டோ?             கடலுக்கவன் சொல்லயன்றிக் கரைகளுண்டோ?             திரைதிரையாகச்சலம் மலைபோல் குவிழ்ந்தெழுந்தும்             சேதமின்றிப் பூதலத்தை மாதயவாய்ப் பாதுகாக்கும் - சுய 3.          நரர் பலர் கூடியொரு மனைமுடிக்க             நாளெல்லாம் உழைத்திட்டாலும் நாள் பிடிக்குமே;             மரமுயிர் தாது இன்னும் வான்புவி அனைத்தையும் ஓர்             வார்த்தையால் க்ஷணப்பொழுதில் நேர்த்தியாய்                                                            உண்டாக்கி வைத்த - சுய 4.          பாவமனுவோர் முகத

அமலா தயாபரா அருள்கூர் ஐயா

அமலா தயாபரா 12. (33) ரீதிகௌள                                         ஆதிதாளம் பல்லவி            அமலா, தயாபரா, அருள்கூர், ஐயா,-குருபரா சரணங்கள் 1.          சமயம் ஈராறோர் ஆறு சாஸ்திரங்கள் வேத நான்கும்             அமையும் தத்துவம் தொண்ணூற் றாறும், ஆறுங்கடந்த             - அம 2.          அந்தம் அடி [1] நடு இல் லாத தற்பரன் ஆதி,             சுந்தரம் மிகும் அதீத [2] சோதிப்பிரகாச நீதி. - அம 3.          ஞானத் ரவிய வேத நன்மைப் பரம போத,             வானத் தேவப் ரசாத மகிமைக் களவில்லாத. - அம 4.          காணப்படா அரூப, கருணைச் சுய சொரூப,             தோணப்படா வியாப, சுகிர் தத் திருத் தயாப. - அம 5.          சத்ய வசன நேயா, சமஸ்த புண்ய சகாயா,             கர்த்தத்துவ உபாயா, கருணை பொழியும் வாயா - அம 6.          எல்லை இல்லா மெய்ஞ் ஞான ஏக பர வஸ்தான             சொல் அரிதாம் நிதான, துல்லிபத் [3] தொன்றாம் மேலான - அம 7.          கருணாகரா, உப காரா, நிராகரா, [4]             பரமேசுரா, கிரு பாகரா, சர்வேசுரா - அம - வேதநாயகம் சாஸ்திரியார்

வந்தனம் வந்தனமே தேவ துந்துமி

வந்தனம் வந்தனமே 11. (35) சங்கராபரணம்                                             சாபுதாளம் பல்லவி   வந்தனம், வந்தனமே! தேவ துந்துமி [1] கொண்டிதமே! [2] - இது   வரையில் எமையே வளமாய்க் காத்த எம்துரையே, மிகத் தந்தனம். சரணங்கள் 1. சந்ததஞ்சந்ததமே, எங்கள் தகுநன்றிக் கடையாளமே,- நாங்கள்      தாழ்ந்து வீழ்ந்து சரணஞ் செய்கையில் தயைகூர், சுரர்பதியே. 2.   சருவ வியாபகமும் எமைச் சார்ந்து தற்காத்ததுவே, - எங்கள்      சாமி, பணிவாய் நேமி [3] துதிபுகழ் தந்தனமே நிதமே! 3.   சருவ வல்லபமதும் எமைத் தாங்கினதும் பெரிதே, - சத்ய      சருவேசுரனே, கிருபாகரனே, உன்சருவத்துக்குந் துதியே. 4. உன்தன் சர்வ ஞானமும் எங்களுள்ளிந்திரியம் யாவையும்-பார்த்தால்      ஒப்பே தருங் காவலே உன்னருளுக்கோ தரும் [4] புகழ் துதி துதியே 5.    மாறாப் பூரணனே, எல்லா வருடங்களிலும் எத்தனை-உன்றன்      வாக்குத் தவறாதருளிப் பொழிந்திட்ட வல்லாவிக்குந் துதியே. -வே. மாசிலாமணி [1] . துதி [2] . இனிமையாய் [3] . கடல் அளவில் [4] . ஒப்பு ஏது அரும் காவலே உன் அருளுக்கு ஓதரும் புகழ்

தெய்வன்பின் வெள்ளமே திருவருள் தோற்றமே

தெய்வன்பின் வெள்ளமே 8. குந்தளவராளி                                                      ஆதிதாளம் கண்ணிகள் 1.           தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே,             மெய் மனதானந்தமே!             செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ் வேளை             ஐயா, நின் அடி பணிந்தேன் 2.          சொந்தம் உனதல்லால் சோர வழி செல்ல             எந்தாய் துணிவேனோ யான்?             புந்தி [1] க்கமலமாம் பூமாலை கோர்த்து நின்             பொற்பதம் பிடித்துக் கொள்வேன்.          3.          பாவச் சேற்றில் பலவேளை பலமின்றித்             தேவே தவறிடினும்,             கூவி விளித்துந் தன் மார்போடணைத்தன்பாய்             யாவும் பொறுத்த நாதா! 4.          மூர்க்ககுணம் கோபம் லோகம் சிற்றின்பமும்             மோக ஏக்கம் யாவும்             தாக்கிடத் தடுமாறித் தயங்கிடும் வேளையில்,             தூக்கித் தற்காத்தருள்வாய். 5.          ஆசை பாசம் பற்று ஆவலாய் நின்திருப்             பூசைப் பீடம் படைப்பேன்;             மோச வழிதனை முற்று மகற்றியென்             நேசனே நினைத் தொழ

துதிக்கிறோம் உம்மை வல்ல பிதாவே

துதிக்கிறோம் உம்மை 7. (155 L) சங்கராபரணம்                                          ஆதிதாளம் 1.           துதிக்கிறோம் உம்மை - வல்ல பிதாவே             துத்தியம் செய்வோம் - உமை மா அரசே             தோத்ரம் உம் மாட்சிமைக்கே - பரனே             துந்துமி மாட்சிமைக்கே - பிதாவே. 2.          சுதனே யிரங்கும் - புவியோர் கடனைச்             சுமந்ததைத் தீர்த்த - தூயசெம்மறியே,             சுத்தா ஜெபங்கேளும் - பரன்வலத்             தோழா ஜெபங்கேளும் - கிறிஸ்தே. 3.          நித்தியபிதாவின் - மகிமையில் நீரே,             நிமலாவியினோ - டாளுகிறீரே,             நிதமேகார்ச்சனையே - உன்னத             நேயருக் கர்ச்சனையே - ஆமேன். - ஞா. சாமுவேல்

சீர்மிகு வான்புவி தேவா தோத்ரம்

சீர்மிகு வான்புவி தேவா 6. (277) சங்கராபரணம்                                             ஆதிதாளம் 1.           சீர்மிகு வான்புவி தேவா, தோத்ரம்,             சிருஷ்டிப்பு யாவையும் படைத்தாய், தோத்ரம்,             ஏர்குணனே தோத்ரம், அடியர்க்-கு             இரங்கிடுவாய், தோத்ரம், மா நேசா. 2.          நேர் மிகு அருள் திரு அன்பா, தோத்ரம்,             நித்தமு முமக் கடியார்களின் தோத்ரம்,             ஆர் மணனே, தோத்ரம், உனது             அன்பினுக்கே தோத்ரம், மா நேசா 3.          ஜீவன், சுகம், பெலன், யாவுக்கும் தோத்ரம்,             தினம் தினம் அருள் நன்மைக்காகவும் தோத்ரம்,             ஆவலுடன் தோத்ரம், உனது             அன்பினுக்கே தோத்ரம், மா நேசா 4.          ஆத்தும நன்மைகட்காகவும் தோத்ரம்,             அதிசய நடத்துதற்காகவும் தோத்ரம்,             சாற்றுகிறோம் தோத்ரம், உனது             தகுமன்புக்கே தோத்ரம், மா நேசா 5.          மாறாப் பூரண நேசா, தோத்ரம்,             மகிழொடு ஜெபமொழி மாலையின் தோத்ரம்,             தாராய் துணை, தோத்ரம், இந்தத்          

சருவ லோகாதிபா நமஸ்காரம்

சருவ லோகாதிபா 5.       (29) சங்கராபரணம்                                         ஆதிதாளம் 1.           சருவ லோகாதிபா, நமஸ்காரம்!             சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்!             தரை, கடல், உயிர், வான், சகலமும் படைத்த             தயாபர பிதாவே, நமஸ்காரம். 2.          திரு அவதாரா, நமஸ்காரம்!             ஜெகத் திரட்சகனே, நமஸ்காரம்!             தரணியின் மனுடர் உயிர் அடைந்தோங்கத்             தருவினில் [1] மாண்டோய், நமஸ்காரம். 3.          பரிசுத்த ஆவி, நமஸ்காரம்!             பரம சற்குருவே, நமஸ்காரம்!             அரூபியாய் அடியார் அகத்தினில் வசிக்கும்             அரியசித்தே சதா நமஸ்காரம். 4.          முத்தொழிலோனே, நமஸ்காரம்!             மூன்றிலொன்றோனே நமஸ்காரம்!             கர்த்தாதி கர்த்தா, கருணாசமுத்திரா,             நித்ய திரியேகா, நமஸ்காரம். - ம. வேதமாணிக்கம் [1] . மரத்தில்

சீர்திரியேக வஸ்தே நமோ நமோ

சீர்திரியேக வஸ்தே நமோ 4.       பூரிகல்யாணி                                                  ஆதிதாளம் பல்லவி                         சீர்திரியேக வஸ்தே, நமோ, நமோ, நின்                         திருவடிக்கு நமஸ்தே நமோ, நமோ! அனுபல்லவி                         பார்படைத்தாளும் நாதா,                         பரம சற்பிரசாதா,                         நாருறுந் தூயவேதா, நமோ, நமோ, நமோ! - சீர் சரணங்கள் 1.          தந்தைப் பராபரனே நமோ நமோ, எமைத்             தாங்கி ஆதரிப்போனே - நமோ, நமோ!             சொந்தக் குமாரன் தந்தாய்,             சொல்லரும் நலமீந்தாய்,             எந்தவிர் போக்குமெந்தாய், நமோ, நமோ, நமோ. - சீர் 2.          எங்கள் பவத்தினாசா நமோ நமோ, புது             எருசலேம் நகர்ராசா நமோ நமோ!             எங்கும் நின் அரசேற,             எவரும் நின் புகழ்கூற,             துங்க மந்தையிற் சேர, நமோ, நமோ, நமோ. - சீர் 3.          பரிசுத்த ஆவிதேவா நமோ, நமோ, திட             பலமளித் தெமைக்காவா, நமோ, நமோ!             கரிசித்துத்தா நற்புத்தி,           

திரி முதல் கிருபாசனனே சரணம்

திரிமுதல் கிருபாசனனே 2.       (3) சங்கராபரணம்                                           ஆதிதாளம் 1.           திரி முதல் கிருபாசனனே, சரணம்!             ஜெக தல ரட்சக தேவா, சரணம்!             தினம் அனுதினம் சரணம்; - கடாட்சி!             தினம் அனுதினம் சரணம், - சருவேசா! 2.          நலம் வளர் ஏக திரித்துவா, சரணம்!             நமஸ்கரி உம்பர்கள் நாதா, சரணம்             நம்பினேன் இது தருணம் - தருணம்;             நம்பினேன், தினம் சரணம் - சருவேசா! 3.          அருவுருவே, அருளரசே, சரணம்!             அன்று மின்று மென்றும் உள்ளாய் சரணம்!             அதிகுணனே, தருணம் - கிரணமொளிர்             அருள் வடிவே, சரணம்.             - சருவேசா! 4.          உலகிட மேவிய உனதா, சரணம்!             ஓர் கிருபாசன ஒளியே, சரணம்!             ஒளி அருள்வாய், தருணம் - மனுவோர்க்கு             உத்தமனே, சரணம்; - சருவேசா! 5.          நித்திய தோத்திர நிமலா, சரணம்!             நிதி இஸ்ரவேலரின் அதிபதி, சரணம்!             நாதா, இது தருணம் - கிருபைக்கொரு             ஆதாரா

ஆ, என்னில் நூறு வாயும் நாவும்

O dass ich tausend Zungen hatte Surrey.   Bavarian Supplement 38 387                                                                 9, 8, 9, 8, 8, 8 (1-ஆம் பாகம்) 1.        ஆ, என்னில் நூறு வாயும் நாவும்                         இருந்தால், கர்த்தர் எனக்கு             அன்பாகச் செய்த நன்மையாவும்,                         அவைகளால் பிரசங்கித்து                         துதிகளோடே சொல்லுவேன்,                         ஓயா தொனியாய்ப் பாடுவேன். 2.          என் சத்தம் வானமளவாக                         போய் எட்ட வேண்டும் என்கிறேன்;             கர்த்தாவைப் போற்ற வாஞ்சையாக                         என் ரத்தம் பொங்க ஆசிப்பேன்;                         ஒவ்வொரு மூச்சும் நாடியும்                         துதியும் பாட்டுமாகவும். 3.          ஆ, என்னில் சோம்பலாயிராதே,                         என் உள்ளமே நன்றாய் விழி;             கர்த்தாவை நோக்கி ஓய்வில்லாதே                         கருத்துடன் ஸ்தோத்திரி;                         ஸ்தோத்திரி, என் ஆவியே,