சுய அதிகாரா சுந்தரக் குமாரா


சுய அதிகாரா, சுந்தரக்குமாரா

15.     கமாஸ்                                                ஆதிதாளம்

பல்லவி

          சுய அதிகாரா, சுந்தரக் குமாரா!
          சொந்த உலகந்தனைத் துறந்த மரி மைந்தனான   - சுய

சரணங்கள்

1.         அகிலத்தை ஒரு சொல்லால் அமைத்தனையே,
            அதையொரு பம்பரம் போலிசைத்தனையே,
            துகில்போலா காயமதை லகுவாய்ச் சமைத்ததிலே
            சோதி பல மாதிரியாய்த் தூக்கி அங்கிலங்க வைத்த - சுய

2.         கரை மத கற்ற குளம் புவியிலுண்டோ?
            கடலுக்கவன் சொல்லயன்றிக் கரைகளுண்டோ?
            திரைதிரையாகச்சலம் மலைபோல் குவிழ்ந்தெழுந்தும்
            சேதமின்றிப் பூதலத்தை மாதயவாய்ப் பாதுகாக்கும் - சுய

3.         நரர் பலர் கூடியொரு மனைமுடிக்க
            நாளெல்லாம் உழைத்திட்டாலும் நாள் பிடிக்குமே;
            மரமுயிர் தாது இன்னும் வான்புவி அனைத்தையும் ஓர்
            வார்த்தையால் க்ஷணப்பொழுதில் நேர்த்தியாய் 
                                                          உண்டாக்கி வைத்த - சுய

4.         பாவமனுவோர் முகத்தைப் பார்த்தாயே,
            பாவச்சுமை தோள் சுமந்து தீர்த்தாயே;
            சுவாமியுனைப் பற்றும் தேவ தாசருக்கிரங்கவேண்டும்,
            தஞ்சம் தஞ்சம் ஓடிவந்தோம், கெஞ்சமனு கேட்டருள் 
                                                                                    வாய் - சுய

- யோவான் பால்மர்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு