15 July 2013

தெய்வாவி மனவாசராய்


Spirit Divine attend our prayers            SS 187

139                                                  C.M.

1.         தெய்வாவி, மனவாசராய்
            வந்தனல் மூட்டுவீர்;
            உம் அடியாரின் உள்ளத்தில்
            மா கிரியை செய்குவீர்.

2.         நீர் சோதிபோல் பிரகாசித்து,
            நிர்ப்பந்த ஸ்திதியும்
            என் கேடும் காட்டி, ஜீவனாம்
            மெய்ப் பாதை காண்பியும்.

3.         நீர் வான அக்னி போலவே
            துர் ஆசை சிந்தையும்
            தீக் குணமும் சுட்டெரிப்பீர்
            பொல்லாத செய்கையும்.

4.         நற்பனிபோலும் இறங்கும்
            இவ்வேற்ற நேரத்தில்;
            செழிப்புண்டாகச் செய்திடும்
            பாழான நிலத்தில்.

5.         புறாவைப்போல சாந்தமாய்
            நீர் செட்டை விரிப்பீர்;
            மெய்ச் சமாதானம் ஆறுதல்
            நற் சீரும் அருள்வீர்.

6.         நீர் பெரும் காற்றைப் போலவும்
            வந்தசைத்தருளும்;
            கல் நெஞ்சை மாற்றிப் பேரன்பை
            நன்குணரச் செய்யும்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...