பாலர் ஞயிறிது, பாசமாய் வாரும்,

பாமாலை - 239
கீதங்களும் கீர்த்தனைகளும்

சங்கராபரணம்

ஆதிதாளம்

பல்லவி

                பாலர் ஞாயிறிது, பாசமாய் வாரும்,
                பாடியேசு நாமம் பணிந்து போற்றும்.

அனுபல்லவி

                தாலந்தைப் புதைத்திடாமல் தாமதமே பண்ணிடாமல்
                ஞாலமீதிறங்கி வந்த சுவாமி யேசு அன்பை எண்ணிப் - பாலர்

சரணங்கள்

1. பாலர் சங்கத்தாலே மாட்சிமை பெற்றோம்
    பாலர் நேசர் பாதம் பணியகற்றோம்
    பாரில் ஜோதி வீசுகின்ற பரிசுத்த வேதம் கற்றோம்
    ஊரில் எங்கும் நம் பஞ்சாங்கம் ஓதும் பாலியர் நேசன்கண்டோம் - பாலர்

2. தேடி வந்தலையும் தேசிகருண்டு
    பாடி ஆர்ப்பரிக்கப் பாலர் பாட்டுண்டு
    கூடி வந்து ஆனந்திக்கக் கூட்டப் பண்டிகையுமுண்டு
    நாடி மீட்பர் பாதம் பாலர் தேடி எல்லா ஏலமுண்டு - பாலர்

3. இன்று மட்டும் நம்மை ஏந்தி வந்தாரே
    இன்னும் நித்தமும் பாதுகாப்பாரே
    அன்பின் சங்கம் இதைக்கொண்டு ஆத்மநேசர்செய்துவரும்
    எண்ணி முடியா நன்மையை ஏகமாக எண்ணிக்கொண் - பாலர்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு