கண்களை ஏறெடுப்பேன்

கண்கணை ஏறெடுப்பேன்

17. பியாகு                                                     சாபுதாளம்

பல்லவி
            கண்களை ஏறெடுப்பேன் - மாமேருநேராய் என்
            கண்களை ஏறெடுப்பேன்.

அனுபல்லவி
             விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்
            தெண்ணில்லா வொத்தாசை என்றனுக்கே வரும்.  - கண்

சரணங்கள்
 1.         காலைத்தள்ளாட வொட்டார்-உறங்காது காப்பவர்
            காலைத்தள்ளாட வொட்டார்,
            வேலையில் நின் றிஸ்ர வேலரைக் காத்தவர்
            காலையும் மாலையும் கண்ணுறங்காரவர் - கண்

2.         பக்க நிழல் அவரே - எனை ஆதரித்திடும்
            பக்க நிழல் அவரே
            எக்கால நிலைமையும் எனைச் சேதப்படுத்தா-து
            அக்கோலம் கொண்டென்னை அக்காவல் புரியவே - கண்

3.         எல்லாத் தீமைகட்கும்-என்னை விலக்கியே
            எல்லாத் தீமைகட்கும்
            பொல்லா உலகினில் போக்குவரத்தையும்
            நல்லாத்துமாவையும் நாடோறும் காப்பவர் - கண்
-த. ஐயாத்துரை

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு