பாடித் துதி மனமே


பாடித் துதி மனமே

18.     (279)                                                  ஆதிதாளம்

பல்லவி
                    பாடித் துதி மனமே; பரனைக் கொண்
                    டாடித் துதி தினமே.

அனுபல்லவி
             நீடித்த காலமதாகப் பரன் எமை
            நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப் - பாடி

சரணங்கள்
 1.         தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்
            செப்பின தேவபரன் இந்தக் காலத்தில்
            மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு
            விளக்கின அன்பை விழைந்து தியானித்துப் -பாடி

2.         சொந்த ஜனமான யூதரைத் தள்ளித்
            தொலையில் கிடந்த புறசாதியாம் எமை
            மந்தையில் சேர்த்துப் பராபரன் தம்முடை
            மைந்தர்களாக்கின சந்தோஷத்துக்காகப் -பாடி

3.         எத்தனை தீர்க்கர், அநேக அப்போஸ்தலர்,
            எத்தனை போதகர்கள், இரத்தச் சாட்சிகள்,
            எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்-கு
            இத்தனையாய்க் கிருபை வைத்த நம் கர்த்தனைப் - பாடி

- வேதநாயகம் சாஸ்திரியார்


Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு