வந்தனம் வந்தனமே தேவ துந்துமி


வந்தனம் வந்தனமே

11. (35) சங்கராபரணம்                                             சாபுதாளம்

பல்லவி
 வந்தனம், வந்தனமே! தேவ துந்துமி[1] கொண்டிதமே![2] - இது
 வரையில் எமையே வளமாய்க் காத்த எம்துரையே, மிகத் தந்தனம்.

சரணங்கள்
1. சந்ததஞ்சந்ததமே, எங்கள் தகுநன்றிக் கடையாளமே,- நாங்கள்
    தாழ்ந்து வீழ்ந்து சரணஞ் செய்கையில் தயைகூர், சுரர்பதியே.

2. சருவ வியாபகமும் எமைச் சார்ந்து தற்காத்ததுவே, - எங்கள்
    சாமி, பணிவாய் நேமி[3] துதிபுகழ் தந்தனமே நிதமே!

3. சருவ வல்லபமதும் எமைத் தாங்கினதும் பெரிதே, - சத்ய
    சருவேசுரனே, கிருபாகரனே, உன்சருவத்துக்குந் துதியே.

4. உன்தன் சர்வ ஞானமும் எங்களுள்ளிந்திரியம் யாவையும்-பார்த்தால்
    ஒப்பே தருங் காவலே உன்னருளுக்கோ தரும்[4] புகழ் துதி துதியே

5.  மாறாப் பூரணனே, எல்லா வருடங்களிலும் எத்தனை-உன்றன்
    வாக்குத் தவறாதருளிப் பொழிந்திட்ட வல்லாவிக்குந் துதியே.
-வே. மாசிலாமணி




[1]. துதி
[2]. இனிமையாய்
[3]. கடல் அளவில்
[4]. ஒப்பு ஏது அரும் காவலே உன் அருளுக்கு ஓதரும் புகழ்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு