16 July 2013

அஞ்சாதிரு என் நெஞ்சமே,

பாமாலை:328

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

Fresch auf mein Seel verzage nicht

Manna.  Innsbruck

 

328                                         8, 8, 6, D

 

1.       அஞ்சாதிரு, என் நெஞ்சமே,

            உன் கர்த்தர் துன்ப நாளிலே

                         கண்பார்ப்போம் என்கிறார்;

             இக்கட்டில் திகையாதிரு,

             தகுந்த துணை உனக்கு

                         தப்பாமல் செய்குவார்.

 

2.         தாவீதும் யோபும் யோசேப்பும்

             அநேக நீதிமான்களும்

                         உன்னிலும் வெகுவாய்

             கஸ்தி அடைந்தும், பக்தியில்

             வேரூன்றி ஏற்ற வேளையில்

                         வாழ்ந்தார்கள் பூர்த்தியாய்.

 

3.         கருத்தாய் தெய்வ தயவை

             எப்போதும் நம்பும் பிள்ளையைச்

                         சகாயர் மறவார்;

             மெய்பக்தி உன்னில் வேர்கொண்டால்

             இரக்கமான கரத்தால்

                         அணைத்து பாலிப்பார்.

 

4.         என் நெஞ்சமே, மகிழ்ந்திரு;

            பேய், லோகம், துன்பம் உனக்கு

                        பொல்லாப்புச் செய்யாதே;

            இம்மானுவேல் உன் கன்மலை,

            அவர் மேல் வைத்த நம்பிக்கை

                        அபத்தம் ஆகாதே.

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...