இரட்சா பெருமானே பாரும்


Saviour like a shepherd lead us
Neale.  SS 1164

326                                                     8, 7, 8, 7, 8, 7

1.       ரட்சா பெருமானே, பாரும்,
                        புண்ணிய பாதம் அண்டினோம்
            சுத்தமாக்கி சீரைத் தாரும்,
                        தேடிவந்து நிற்கிறோம்!
            இயேசு நாதா, இயேசு நாதா,
                        உந்தன் சொந்தமாயினோம்.

2.         மேய்ப்பன் போல முந்திச் சென்றும்
                        பாதுகாத்தும் வருவீர்;
            ஜீவ தண்ணீரண்டை என்றும்
                        இளைப்பாறச் செய்குவீர்;
            இயேசு நாதா, இயேசு நாதா,
                        மேய்ச்சல் காட்டிப் போஷிப்பீர்.

3.         நீதி பாதை தவறாமல்
                        நேசமாய் நடத்துவீர்!
            மோசம் பயமுமில்லாமல்
                        தங்கச் செய்து தாங்குவீர்!
            இயேசு நாதா, இயேசு நாதா,
                        ஒருபோதும் கைவிடிர்.

4.         ஜீவ கால பரியந்தம்
                        மேய்த்தும் காத்தும் வருவீர்;
            பின்பு மோட்ச பேரானந்தம்
                        தந்து வாழச்செய்குவீர்;
            இயேசு நாதா, இயேசு நாதா,
                        ஊழி காலம் வாழ்விப்பீர்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு