அமலா தயாபரா அருள்கூர் ஐயா


அமலா தயாபரா

12. (33) ரீதிகௌள                                        ஆதிதாளம்

பல்லவி

          அமலா, தயாபரா, அருள்கூர், ஐயா,-குருபரா

சரணங்கள்

1.         சமயம் ஈராறோர் ஆறு சாஸ்திரங்கள் வேத நான்கும்
            அமையும் தத்துவம் தொண்ணூற் றாறும், ஆறுங்கடந்த            - அம

2.         அந்தம் அடி[1] நடு இல் லாத தற்பரன் ஆதி,
            சுந்தரம் மிகும் அதீத[2] சோதிப்பிரகாச நீதி. - அம

3.         ஞானத் ரவிய வேத நன்மைப் பரம போத,
            வானத் தேவப் ரசாத மகிமைக் களவில்லாத. - அம

4.         காணப்படா அரூப, கருணைச் சுய சொரூப,
            தோணப்படா வியாப, சுகிர் தத் திருத் தயாப. - அம

5.         சத்ய வசன நேயா, சமஸ்த புண்ய சகாயா,
            கர்த்தத்துவ உபாயா, கருணை பொழியும் வாயா - அம

6.         எல்லை இல்லா மெய்ஞ் ஞான ஏக பர வஸ்தான
            சொல் அரிதாம் நிதான, துல்லிபத்[3] தொன்றாம் மேலான - அம

7.         கருணாகரா, உப காரா, நிராகரா,[4]
            பரமேசுரா, கிரு பாகரா, சர்வேசுரா - அம
- வேதநாயகம் சாஸ்திரியார்



[1]. ஆதி
[2]. மனதுக்கு எட்டாத
[3]. நிறைவு
[4]. உருவமற்றவனே

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு