இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்


While shepherd watched their flocks
Winchester Old-Northrop

72                                                   C.M.

1.         ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
                        தம் மந்தை காத்தனர்;
            கர்த்தாவின் தூதன் இறங்க;
                        விண் ஜோதி கண்டனர்.

2.         அவர்கள் அச்சங் கொள்ளவும்
                        விண் தூதன், திகில் ஏன்?
            எல்லாருக்கும் சந்தோஷமாம்
                        நற்செய்தி கூறுவேன் .

3.         "தாவீதின் வம்சம் ஊரிலும்,
                        மெய் கிறிஸ்து நாதனார்
            பூலோகத்தார்க்கு ரட்சகர்
                        இன்றைக்குப் பிறந்தார்."

4.         "இதுங்கள் அடையாளமாம்,
                        முன்னணை மீது நீர்
            கந்தை பொதிந்த கோலமாய்
                        அப்பாலனைக் காண்பீர்."

5.         என்றுரைத்தான்; அக்ஷணமே
                        விண்ணோராம் கூட்டத்தார்
            அத்தூதனோடு தோன்றியே
                        கர்த்தாவைப் போற்றினார்.

6.         "மா உன்னதத்தில், ஆண்டவா,
                        நீர் மேன்மை அடைவீர்;
            பூமியில் சமாதானமும்
                        நல்லோர்க்கு ஈகுவீர்.'

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு