Posts

Showing posts from 2017

அருணோதயம் எழுந்திடுவோம்

1.       அருணோதயம் எழுந்திடுவோம்              பரனேசுவைத் துதிப்போம்              அருணோதயம் பரமானந்தம்              பரனோடுறவாடவும். 2.           இதைப் போன்றொரு அருணோதயம்              எம்மைச் சந்திக்கும் மனமே              ஆ! என்னானந்தம்! ஜோதி சூரியனாம்              எந்தன் நேச ரெழும்பும் நாள். 3.           நன்றியாலுள்ளம் பூரித்திடுதே              அன்னையாம் மேசு காருண்யம்              ஒவ்வொன்றா யிதைத் தியானம் செய்யவும்              எவ்வாறு மேற்ற சந்தர்ப்பம் 4.           போன ராவினில் ஜீவித்தோர் பலர்              லோகம் விட்டுமே போய் விட்டார்              ஆயினும் நமக்கிந்தத் தினமும்              தந்த நேசரைத் துதிப்போம் 5.           நானிர் வாணியாய் வந்த வண்ணமே நிர்              வாணியா யங்கு போகின்றேன்,              கூடச் செல்லவும் பூவிலொன்றுண்டோ?              நாடி போமந்த நாட்டிற்கே 6.           ஆயென் நேசரின் அன்பை யெண்ணவும்              ஆனந்தம் பரமானந்தம்              ஆயென் நேசரோர் நவ வான் புவி              தானஞ் செய்ததே ஆனந்தம் 7

தோத்திர பாத்திரனே தேவா

தோத்திரந் துதி உமக்கே 336. (16) சங்கராபரணம்                                           ஆதி தாளம் பல்லவி               தோத்திர பாத்திரனே, தேவா,               தோத்திரந் துதியுமக்கே!               நேத்திரம்போல் முழு ராத்ரியுங்காத்தோய்;               நித்தியம் துதியுமக்கே! சரணங்கள் 1.           சத்துரு பயங்களின்றி,-நல்ல              நித்திரை செய்ய எமை              பத்திரமாய்ச்சீ ராட்டி உறக்கியே [1]              சுற்றிலுங் கோட்டையானாய். - தோத்திர 2.           விடிந்திருள் ஏகும்வரை-கண்ணின்              விழிகளை மூடாமல்,              துடி [2]  கொள் தாய்போல் படிமிசை [3]  எமது              துணை எனக் காத்தவனே. - தோத்திர 3.           காரிருள் அகன்றிடவே,-நல்ல              கதிரொளி திகழ்ந்திடவே,              பாரிதைப் புரட்டி உருளச்செய் தேகன              பாங்கு சீராக்கி வைத்தாய். - தோத்திர 4.           இன்றைத் தினமிதிலும்-தொழில்              எந்தெந்த வகைகளிலும்              உன் திரு மறைப்படி ஒழுகிட எமக்கருள்              ஊன்றியே காத்துக்

நல்ல தேவனே ஞான ஜீவனே

வாழ்த்திப் போற்றுவேன் 335. மோகனம்                                             திஸ்ர ஏகதாளம் கண்ணிகள் 1.           நல்ல தேவனே, ஞான ஜீவனே;              வல்ல உமது கருணை தன்னை              வாழ்த்திப் போற்றுவேன். 2.           போன ராவிலே பொல்லாங்கின்றியே,              ஆன நல்ல அருளினாலே              அன்பாய்க் காத்தீரே. 3.           காலையைக் கண்டேன், கர்த்தா உம்மையே              சாலவும் துதித்துப் போற்றிச்              சார்ந்து கொள்ளுவேன். 4.           சென்ற ராவதின் இருளைப்போலவே,              என்றன் பாவ இருளைப் போக்கி,              இலங்கப் பண்ணுமே! 5.           இன்று நானுமே இன்பமாகவே,              உன்றன் வழியில் நடக்கக் கருணை              உதவவேணுமே! 6.           ஒளியின் பிள்ளையாய் ஊக்கமாகவே,              எளியன் இன்றும் நடக்க ஆவி              ஈந்தருளுமே! 7.           கையைக் காவுமே, கண்ணைக் காவுமே!              மெய்யைக் காத்து என்றன் மனதை              மிகவும் காவுமே! - ச. அருமைநாயகம்

அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு

அதிகாலையில் உமைத் தேடுவேன் 334. நவரோஜ்                                                         ஏகதாளம் பல்லவி             அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே;-தே             வாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே. அனுபல்லவி                           இதுகாறும் காத்த தந்தை நீரே;                           இனிமேலும் காத்தருள் செய்வீரே,                           பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே,                           பத்திரமாய் எனை உத்தமனாக்கிடும், தேவே! - அதி சரணங்கள் 1.           போனராமுழுவதும் பாதுகாத்தருளின போதா! - எப்              போதும் எங்களுடனிருப்பதாய் உரைத்த நல் நாதா!              ஈனப்பாவிக் கேதுதுணை லோகிலுண்டு பொற்பாதா?              எனக்கான ஈசனே! வான ராசனே!              இந்த நாளிலும் ஒரு பந்தமில்லாமல் காரும் நீதா! - அதி 2.           பலசோதனைகளால் சூழ்ந்துநான் கலங்கிடும்போது,-தப்              பாது நின்கிருபை தாங்கிட வேணும் அப்போது,              விலகாது என்சமூகம் என்ற வாக்கில் தவறேது?              விசுவாசங்கொண்டு மெய்ப் பாச

தோத்திரம் க்ருபை கூர் ஐயா

கிருபைகூர் ஐயா 333. (20) கல்யாணி                                                  ஆதி தாளம் பல்லவி                           தோத்திரம்! க்ருபை கூர், ஐயா!                           விழி பார், ஐயா; விழி பார், ஐயா! சரணங்கள் 1.           பாத்திரம் இலா எனை நேத்திரம் என உச்சிதமாய்க்              காத்து வந்திடும், எனது கர்த்தாதி கர்த்தனே! - தோத்திரம் 2.           இந்த நாள் அளவிலும் வந்த துன்பம் யாவுமே              என்றனை விட்டகலவே இரங்கிய தேவனே! - தோத்திரம் 3.           மனதிலும் வாக்கிலும் மட்டில்லாத பாவி நான்;              எனது தீதகற்றி ஆளும், ஏகாம்பர நாதனே! - தோத்திரம் 4.           போதனே, நீதனே, புனித சத்ய வேதனே,              கீதனே, தாசர் துதி கேளும், யேசு நாதனே! - தோத்திரம் - ஏ. அண்ணாவியார்

கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத்

இறைவனைத் துதி செய்ய எழுந்திராய் 332. (341) பூபாளம்                               சாபு தாளம் கண்ணிகள் 1.           கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத்              துதி செய்ய மனமே-எழுந்திராய். 2.           வறண்டு தண்ணீர் அற்ற வனம் இந்தப் புவிதனில்              திரண்ட தயை தேவை-நாடுவேன். 3.           கடவுளின் வல்லமை, கன மகிமை காணும்              இடமதில் செல்வதே-என் இஷ்டம். 4.           ஜீவனைப் பார்க்கிலும் தேவனின் காதலை              ஆவலாய் நாடி நான்-போற்றுவேன். 5.           ஆயுள் பரியந்தம் ஆண்டவர் நாமத்தை              நேயமாய் பாடி நான்-உயர்த்துவேன். 6.           மெத்தையில் ராச்சாமம் நித்திரை கொள்கையில்              கர்த்தரின் செயல்களைச்-சிந்திப்பேன். 7.           அல்லும் பகலும் நான் அவர் செட்டைகளின்கீழ்த்              தொல்லைக்கு நீங்கியே-ஒதுங்குவேன். 8.           ஆத்துமம் தேவனை அண்டிக் கொள்ள அவர்              நேத்திரம் போல் என்னைக் காக்கிறார். - த. யோசேப்பு

ஐயனே உமது திருவடி களுக்கே

உமது திருவடிகளுக்கே தோத்திரம் 330. சங்கராபரணம்                               ஆதிதாளம் கண்ணிகள் 1.           ஐயனே! உமது திருவடி களுக்கே              ஆயிரந்தரந் தோத்திரம்!              மெய்யனே! உமது தயைகளை அடியேன்              விவரிக்க எம்மாத்திரம்? 2.           சென்றதாம் இரவில் தேவரீனென்னைச்              சேர்த்தரவணைத்தீரே;              அந்தடைவாயிப் பகலிலுங் கிருபை              யாகவா தரிப்பீரே. 3.           இருதயந் தனை நீர் புதியதே யாக்கும்              ஏழையைக் குணமாக்கும்.              கருணையாய் என்னை உமதகமாக்கிக்              கன்மமெல்லாம் போக்கும். 4.           நாவிழி செவியை, நாதனே, இந்த              நாளெல்லாம் நீர் காரும்.              தீவினை விலகிநான் திருமுகம் நோக்க,              தெய்வமே, அருள்கூரும். 5.           கைகாலால் நான் பவம்புரி யாமல்              சுத்தனே துணை நில்லும்.              துய்யனே, உம்மால் தான் எனதிதயம்              தூய்வழியே செல்லும். 6.           ஊழியந் தனைநான் உண்மையாச் செய்ய              உதவி ந

இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய்

இன்றைத் தினம் உன் அருள் ஈகுவாய் 331. (16) சுருட்டி                                           சாபு தாளம் பல்லவி               இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய், இயேசுநாதையா;               இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய் அனுபல்லவி               அன்றுன் உதிரம் நரர்க் கென்று சிந்தி மீட்டெனை               வென்றியுடன் ரட்சித்த நன்றி போலே எனக்கு. - இன் சரணங்கள் 1.           போன ராவில் என்னைக் கண் பார்த்தாய்,-பலவிதமாம்              பொல்லா மோசங்களில் தற்காத்தாய்;              ஈன சாத்தான் எனையே இடர்க்குள் அகப்படுத்தி,              ஊனம் எனக்குச் செய்யா துருக்கமுடன் புரந்தாய். [1]  - இன்றை 2.           கையிட்டுக் கொள்ளும் என்றன் வேலை-யாவிலுமுன்றன்              கடைக்கண் ணோக்கி, அவற்றின் மேலே,              ஐயா நின் ஆசீர்வாதம் அருளி, என் மனோவாக்கு              மெய்யால் நின் மகிமையே விளங்கும்படி ஒழுக. - இன்றை 3.           எத்தனையோ விபத்தோர் நாளே;-தஞ்சம் நீ என              எளியேன் அடைந்தேன் உன்றன் தாளே;              பத்தர் பாலனா, எனைப் பண்பாய் ஒப்

காலமே தேவனைத் தேடு ஜீவ

காலமே தேவனைத் தேடு 329. (15) மோகனம்                                        சாபு தாளம் பல்லவி              காலமே தேவனைத் தேடு;-ஜீவ              காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு. அனுபல்லவி                          சீலமுடன் பதம் பாடிக்கொண்டாடு;                          சீரான நித்திய ஜீவனை நாடு. - காலமே சரணங்கள் 1.           மன்னுயிர்க்காய் மரித்தாரே,-மனு              மைந்தனென நாமம் வைத்திருந்தாரே;              உன் சிருட்டிகரை நீ உதயத்திலெண்ணு!              உள்ளங்கனிந்து தனிஜெபம் பண்ணு. - காலமே 2.           பாவச் சோதனைகளை வெல்லு;-கெட்ட              பாருடல் பேயுடன் போருக்கு நில்லு,              ஜீவ கிரீடஞ் சிரத்திலணியச்              சிந்தனை செய்; மனுவேலனைப் பணிய. - காலமே 3.           சிறுவர்கள் என்னிடஞ் சேரத்-தடை              செய்யா திருங்களென்றார் மனதார;              பரலோக செல்வ மவர்க்குப் பலிக்கும்;              பாக்கியமெல்லாம் பரந்து ஜொலிக்கும். - காலமே 4.           வேலையுனக்குக் கைகூட,-சத்ய              வேதன் கிருபை வரத்

கீழ் வான கோடியின்

Moscow 31                                           6, 6, 4, 6, 6, 6, 4 1.           கீழ் வான கோடியின்             செம் காந்தி சூரியன்                         எழும்பிடும்;             அடியார் ஆன்மத்தின்             நீதியின் சூரியன்             ஆரோக்கியம் சீருடன்                         எழும்பிடும். 2.          ராவிருள் நீங்கிற்றே             காந்தியும் தோன்றிற்றே                         பூமி தன்னில்;             பாவாந்தகாரமும்             எவ்வறிவீனமும்             நீங்கிடத் தோன்றிடும்                         எம் நெஞ்சத்தில். 3.          வடிவம் வர்ணமும்             வான் புவி வண்ணமும்                         காணுவோமே;             உம் சிஷ்டி நோக்கத்தை             உம் ஞான ஜோதியை             உந்தன் நற்பாதையைக்                         காட்டுவீரே. 4.          ஜீவ இராசிகள்             நீர் நில வாசிகள்                         எழும்பவே;             மகிழ்ந்து மாந்தரும்             வணங்கிப் போற்றியும்             செல்வோம் எம் வே