கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத்


இறைவனைத் துதி செய்ய எழுந்திராய்

332. (341) பூபாளம்                               சாபு தாளம்

கண்ணிகள்

1.         கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத்
            துதி செய்ய மனமே-எழுந்திராய்.

2.         வறண்டு தண்ணீர் அற்ற வனம் இந்தப் புவிதனில்
            திரண்ட தயை தேவை-நாடுவேன்.

3.         கடவுளின் வல்லமை, கன மகிமை காணும்
            இடமதில் செல்வதே-என் இஷ்டம்.

4.         ஜீவனைப் பார்க்கிலும் தேவனின் காதலை
            ஆவலாய் நாடி நான்-போற்றுவேன்.

5.         ஆயுள் பரியந்தம் ஆண்டவர் நாமத்தை
            நேயமாய் பாடி நான்-உயர்த்துவேன்.

6.         மெத்தையில் ராச்சாமம் நித்திரை கொள்கையில்
            கர்த்தரின் செயல்களைச்-சிந்திப்பேன்.

7.         அல்லும் பகலும் நான் அவர் செட்டைகளின்கீழ்த்
            தொல்லைக்கு நீங்கியே-ஒதுங்குவேன்.

8.         ஆத்துமம் தேவனை அண்டிக் கொள்ள அவர்
            நேத்திரம் போல் என்னைக் காக்கிறார்.

- த. யோசேப்பு

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு