காலமே தேவனைத் தேடு ஜீவ


காலமே தேவனைத் தேடு

329. (15) மோகனம்                                        சாபு தாளம்

பல்லவி

            காலமே தேவனைத் தேடு;-ஜீவ
            காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு.

அனுபல்லவி

                        சீலமுடன் பதம் பாடிக்கொண்டாடு;
                        சீரான நித்திய ஜீவனை நாடு. - காலமே

சரணங்கள்

1.         மன்னுயிர்க்காய் மரித்தாரே,-மனு
            மைந்தனென நாமம் வைத்திருந்தாரே;
            உன் சிருட்டிகரை நீ உதயத்திலெண்ணு!
            உள்ளங்கனிந்து தனிஜெபம் பண்ணு. - காலமே

2.         பாவச் சோதனைகளை வெல்லு;-கெட்ட
            பாருடல் பேயுடன் போருக்கு நில்லு,
            ஜீவ கிரீடஞ் சிரத்திலணியச்
            சிந்தனை செய்; மனுவேலனைப் பணிய. - காலமே

3.         சிறுவர்கள் என்னிடஞ் சேரத்-தடை
            செய்யா திருங்களென்றார் மனதார;
            பரலோக செல்வ மவர்க்குப் பலிக்கும்;
            பாக்கியமெல்லாம் பரந்து ஜொலிக்கும். - காலமே

4.         வேலையுனக்குக் கைகூட,-சத்ய
            வேதன் கிருபை வரத்தை மன்றாட,
            காலை தேடுவோர் எனைக் கண்டடைவாரே,
            கண்விழித்து ஜெபஞ் செய்யுமென்றாரே. - காலமே

- ச.பே. ஞானமணி

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு