நல் மீட்பரே இந்நேரத்தில்


Sweet Saviour bless us ere we go

St. Matthias

26                                    8, 8, 8, 8, 8, 8

1.         நல் மீட்பரே, இந்நேரத்தில்
            வந்தாசீர்வாதம் கூறுமேன்;
            உம் வார்த்தை கேட்டோர் மனதில்
            பேரன்பின் அனல் மூட்டுமேன்,
            வாழ்நாளிலும், சாங்காலத்தும்,
            ஆ இயேசுவே, பிரகாசியும்.

2.         இன்றெங்கள் செய்கை யாவையும்
            தயாபரா, நீர் நோக்கினீர்;
            எல்லாரின் பாவம் தவறும்,
            மா அற்பச் சீரும் அறிந்தீர்.
            வாழ்நாளிலும், சாங்காலத்தும்,
            ஆ இயேசுவே, பிரகாசியும்.

3.         எப்பாவத் தீங்கிலிருந்தும்
            விமோசனத்தைத் தாருமேன்;
            உள்ளான சமாதானமும்
            சுத்தாங்கமும் உண்டாக்குமேன்.
            வாழ்நாளிலும், சாங்காலத்தும்,
            ஆ இயேசுவே, பிரகாசியும்.

4.         சந்தோஷம் பயபக்தியும்
            நீர் நிறைவாக ஈயுமேன்;
            உமக்கொப்பாக ஆசிக்கும்
            தூய்மையாம், உள்ளம் தாருமேன்.
            வாழ்நாளிலும், சாங்காலத்தும்,
            ஆ இயேசுவே, பிரகாசியும்

5.         தரித்திரம் துன்பம் பாவத்தால்
            இக்கட்டடைந்த யாரையும்
            கண்ணோக்கும் மா கிருபையால்;
            நீர் மீட்பர், நீர் சமஸ்தமும்
            வாழ்நாளிலும், சாங்காலத்தும்,
            ஆ இயேசுவே, பிரகாசியும்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு