அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு


அதிகாலையில் உமைத் தேடுவேன்

334. நவரோஜ்                                                         ஏகதாளம்

பல்லவி

          அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே;-தே
          வாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே.

அனுபல்லவி

                        இதுகாறும் காத்த தந்தை நீரே;
                        இனிமேலும் காத்தருள் செய்வீரே,
                        பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே,
                        பத்திரமாய் எனை உத்தமனாக்கிடும், தேவே! - அதி

சரணங்கள்

1.         போனராமுழுவதும் பாதுகாத்தருளின போதா! - எப்
            போதும் எங்களுடனிருப்பதாய் உரைத்த நல் நாதா!
            ஈனப்பாவிக் கேதுதுணை லோகிலுண்டு பொற்பாதா?
            எனக்கான ஈசனே! வான ராசனே!
            இந்த நாளிலும் ஒரு பந்தமில்லாமல் காரும் நீதா! - அதி

2.         பலசோதனைகளால் சூழ்ந்துநான் கலங்கிடும்போது,-தப்
            பாது நின்கிருபை தாங்கிட வேணும் அப்போது,
            விலகாது என்சமூகம் என்ற வாக்கில் தவறேது?
            விசுவாசங்கொண்டு மெய்ப் பாசமூண்டிட,
            விக்கினம்[1] யாவிலும் வெற்றி காணுவேன் மலைவேது?   - அதி

3.         நரர் யாவர்க்கு முற்ற நண்பனாய் நடந்திடவையே! - தீ
            நாவின் பாவமற நன்மைகள் மொழிந்திடச் செய்யே!
            பரலோக ஆவியை நல் மாரிபோலெனிலே பெய்யே!
            புகழான நாதனே! வேத போதனே!
            பூரணமாய் உனைப் போற்றுவேன், தினந் தினம் மெய்யே! - அதி

- சா.  பரமானந்தம்



[1] இடையூறு

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு