ஆஸ்திகளெல்லாம்
ஈடாகுமா
என்
அப்பா உந்தன் அன்பிற்கு இணையாகுமோ
உலக நேசங்கள் ஈடாகுமா
என் ராஜா உந்தன் அன்பிற்கு
இணையாகுமோ
1. அன்பின் அக்கினி பற்றியெரியுதே
உள்ளமெல்லாம் உம்மை நாடித் தேடுதே
தண்ணீர்கள் தணிப்பதில்லையே
நேசரே உந்தன் அன்பினை
2. திராட்சை ரசத்திலும் உம் நேசம் பெரியது
உந்தன் நாமமோ இனிமையானது
ருசித்து விட்டேன் உந்தன் அன்பினை
அறிந்து கொண்டேன் உந்தன் பாசத்தை
3. தாயும் நீரே தந்தையும் நீரே
சொந்தமும் நீரே எனதெல்லாம் நீரே
ஆத்ம நேசர் எந்தன் நேசரே
ஆயுளெல்லாம் போதும் நீரே
4. வெண்மையானவர் நீர் ரூபமுள்ளவர்
இன்பமானவர் நீர் மதுரமானவர்
உன்னத பாடல் உமக்குத்தானய்யா
அன்பரே எந்தன் இயேசய்யா
No comments:
Post a Comment