ஆவியானவரே
ஆவியானவரே
பரிசுத்த ஆவியானவரே
அன்பின் ஆவியே அன்பின் ஆவியே
அபிஷேகம் இன்று தாருமே
1. பாத்திரம் நிரம்பி வழிய வேண்டுமே
கன்மலை தடாகமாக வேண்டுமே
கற்பாறை நீரூற்றாக வேண்டுமே
வரப்புகள் யாவும் தணிய வேண்டுமே
2. ஜனத்தின் மேல் அசைவாட வேண்டுமே
ஜனத்தின் பாவம் உணர்த்த வேண்டுமே
ஒழுங்கின்மை மாற வேண்டுமே
வெறுமை நிறைவாக வேண்டுமே
3. ஊழியத்தில் எழுப்புதல் வேண்டுமே
பாழிடங்கள் அரண்மணையாகவே
உள்ளத்தில் ஆறுதல் வேண்டுமே
வாழ்விலே மாறுதல் வேண்டுமே
4. நாவிலே அக்கினி வேண்டுமே
உள்ளத்திலே ஜீவ நதி ஓடவே
பெருங்காற்று முழக்கம் வேண்டுமே
இருக்குமிடம் அசைய வேண்டுமே
- Pastor. Caleb Jeyakumar, Kattathurai.
No comments:
Post a Comment