ஆவியானவர்
என் சந்தோஷமானார்
ஆவியானவர் என் சங்கீதமானார்
ஆவியானவர் என் வல்லமையானாவர்
ஆவியானவர் என் அபிஷேகமானார்
1. மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாக
தேவன் தந்த பரலோக பரிசு அவரே
எனக்குள்ளே இருப்பவர் பெரியவரே
கெர்ச்சிக்கும் சிங்கத்தை ஜெயித்தவரே
2. வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் அதிகமாகவே
நமக்குள்ளே கிரியை செய்யும் வல்லவர் அவரே
அற்புதங்கள் அதிசயங்கள் அடையாளங்கள்
மகிமையான காரியங்கள் செய்திடுவாரே
3. முற்புறத்திலும் பிற்புறத்திலும் நெருக்கி
என் மேலே
உமது கரம் வைப்பதாலே ஆச்சரியமே
ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்
உம்முடைய சமூகம் என்னை சூழ்ந்து கொள்ளுமே
No comments:
Post a Comment