451.
இராகம்: சங்கராபரணம் ஆதி
தாளம்
பல்லவி
ஆனந்தமே
பரமானந்தமே-யேசு
அண்ணலை
அண்டினோர்க் கானந்தமே
சரணங்கள்
1. இந்தப்
புவி ஒரு சொந்தமல்லவென்று
இயேசு
என் நேசர் மொழிந்தனரே
இக்கட்டும்
துன்பமும் இயேசுவின் தொண்டர்க்கு
இங்கேயே
பங்காய் கிடைத்திடினும் - ஆன
2. கூடாரவாசிகளாகும்
நமக்கிங்கு
வீடென்றும்
நாடென்றும் சொல்லலாமோ?
கைவேலையில்லாத
வீடொன்றை மேலேதான்
செய்வேன்
எனச் சொல்லிப் போகலையோ - ஆன
3. யேசுவே
சீக்கிரம் இத்தரை வாருமேன்
ஏழை
வெகுவாய்க் கலங்குகிறேனே!
என்நேசர்
தன்முக ஜோதியே யல்லாமல்
இன்பந்தரும்
பொருள் ஏதுமில்லை - ஆன
- அருட்திரு. வி.டி. சகாயம்
No comments:
Post a Comment