ஆவியான
தேவனே அன்புள்ள தேவனே
என் மேலே இறங்கிடுமே என்னோடு
இறங்கிடுமே
1. உம் இரத்தத்தால் பரிசுத்த இரத்தத்தால்
என்னையும் கழுவிடுமே
உம் ஈசோப்பினால் சுத்திகரித்திடுமே
உம் சாயலாக என்னை மாற்றி விடும்
2. உம் பிள்ளையாய் என்னை மாற்றுமய்யா
மறுரூபமாக என்னை ஆக்குமய்யா
மகிமையில் கொண்டு போய் சேர்க்கும் வரை
மறைவிடத்தில் காத்துக் கொள்ளுமய்யா
3. எப்போது மீண்டும் வருவீர் ஐயா
என்றே இதயம் ஏங்குதய்யா
வருகையின் நாளது வரும் வரையில்
உம் சாயலால் திருப்தியாகி வாழ்வேனய்யா
No comments:
Post a Comment